பீஜிங்: பிரதமர் மோடி அடுத்த வாரம் சீனாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்நிலையில் சீன சமூக வலைதளமான சீனா வெய்போவில் முதன்முறையாக தனது கணக்கைத் தொடங்கி அதில் தனது கருத்தினையும் பதிவிட்டுள்ளார் மோடி. சீனா வெய்போ தளத்தில் 50 கோடி சீன மக்கள் பயன்பாட்டாளர்களாக உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி இந்த வலைத்தளத்தில் இணைந்துள்ள முதல் இந்தியத் தலைவராக அறியப் படுகிறார். இதில் அவர், ஹலோ சீனா! சீன நண்பர்களுடன் வெய்போ வழியாக கலந்துரையாட நான் முனைப்புடன் உள்ளேன் என சீன மொழியில் தனது முதல் பதிவை எழுதியுள்ளார். இதில் அவர் இணைந்து ஒரு மணி நேரத்தில் 7 ஆயிரம் பேர் இதனைப் பார்த்துள்ளனர். அவரது பதிவுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதில் பிளாக்கர் ஒருவர் மிக அழகாக இருக்கிறீர்கள் எனப் புகழ்ந்துள்ளார். வேறொருவர், வெய்போவிற்கு வந்துள்ள தங்களை வரவேற்கிறேன் என வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒரு பதிவில், மற்றுமொரு சர்வதேச பிரபலம் வெய்போவில் இணைந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது பீஜிங் நகருக்கு அடிக்கடி சென்று வந்தார். தற்போது பிரதமராக வரும் மே 14 முதல் 16 வரை சீனாவுக்கு முதல் முறையாகச் செல்லவுள்ளார். மோடியின் சமூக வலைதளக் கருத்துப் பதிவு உலக அளவில் அதிக வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீன சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட மோடி: சீ னப் பயணத்துக்கு முன்னேற்பாடு
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari