January 19, 2025, 2:49 PM
27.8 C
Chennai

சீன சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட மோடி: சீ னப் பயணத்துக்கு முன்னேற்பாடு

பீஜிங்: பிரதமர் மோடி அடுத்த வாரம் சீனாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்நிலையில் சீன சமூக வலைதளமான சீனா வெய்போவில் முதன்முறையாக தனது கணக்கைத் தொடங்கி அதில் தனது கருத்தினையும் பதிவிட்டுள்ளார் மோடி. சீனா வெய்போ தளத்தில் 50 கோடி சீன மக்கள் பயன்பாட்டாளர்களாக உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி இந்த வலைத்தளத்தில் இணைந்துள்ள முதல் இந்தியத் தலைவராக அறியப் படுகிறார். இதில் அவர், ஹலோ சீனா! சீன நண்பர்களுடன் வெய்போ வழியாக கலந்துரையாட நான் முனைப்புடன் உள்ளேன் என சீன மொழியில் தனது முதல் பதிவை எழுதியுள்ளார். இதில் அவர் இணைந்து ஒரு மணி நேரத்தில் 7 ஆயிரம் பேர் இதனைப் பார்த்துள்ளனர். அவரது பதிவுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதில் பிளாக்கர் ஒருவர் மிக அழகாக இருக்கிறீர்கள் எனப் புகழ்ந்துள்ளார். வேறொருவர், வெய்போவிற்கு வந்துள்ள தங்களை வரவேற்கிறேன் என வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒரு பதிவில், மற்றுமொரு சர்வதேச பிரபலம் வெய்போவில் இணைந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது பீஜிங் நகருக்கு அடிக்கடி சென்று வந்தார். தற்போது பிரதமராக வரும் மே 14 முதல் 16 வரை சீனாவுக்கு முதல் முறையாகச் செல்லவுள்ளார். மோடியின் சமூக வலைதளக் கருத்துப் பதிவு உலக அளவில் அதிக வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ:  பிரபல பின்னணிப் பாடகர் பி. ஜெயசந்திரன் காலமானார்!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை படிபூஜை நிறைவு; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் தற்போது மண்டல, மகர விளக்கு பூஜை வழிபாடுகள் விழாக்கள் முடிந்து மகரம் மாதபூஜை வழிபாடுகள் ஐயப்பனுக்கு நடந்து வருகிறது

சபரிமலை பெருவழிப்பாதை மூடல்!

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தையாய் நினைத்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் பயணித்து வந்த சபரிமலை பெருவழிப் பாதை நடை தற்போது மூடப்பட்டதால்

இன்று நெய் அபிஷேகம், நாளை தரிசனத்துடன் மகரவிளக்கு கால வழிபாடு நிறைவு!

பக்தர்கள் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்யலாம் என்ற நிலையில், இன்று காலை நெய்யபிஷேகத்துக்காக பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாகவே இருந்தது

பஞ்சாங்கம் ஜன.18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.