இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், “நேற்று முன்தினம் சென்னை சத்தியபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலின் (AICTE) துணைத் தலைவரான எம்.பி.பூனியா, பொறியியல் படிப்புக்கும் 2019-ம் ஆண்டு முதல் நீட் வருகிறது என்று குறிப்பிட்டார். நீட் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில்தான் உள்ளது. அதில் நீதியைப் பெறும் நடவடிக்கையில் இறங்க வேண்டும்; முடக்கப்பட்ட நீட்-விலக்கு மசோதாக்களுக்கும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.