ரஷியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து தொடரில் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா காலிறுதியில் பிரான்ஸிடம் தோல்வியடைந்து வெளியேறியது.
இதனால் அந்த அணியின் தலைமை பயிற்சியாளரான ஜார்ஜ் சம்போலி தனது பதவியை ராஜினாமா செய்தார். உலகக்கோப்பைக்குப் பிறகு அர்ஜென்டினா செப்டம்பர் 3-ந்தேதி கொலிம்பியாவையும், செப்டம்பர் 7-ந்தேதி கவுதமாலாவையும் எதிர்கொள்கிறது.
இந்நிலையில் பப்லோ எய்மர், லியோனல் ஸ்காலோனி ஆகியோரை பயிற்சியாளராக நியமித்துள்ளது. மேலும் ‘‘பின்னர் அர்ஜென்டினா அணிக்கு நிலையான பயிற்சியாளரை நியமிப்போம்’’ என்று அர்ஜென்டினா கால்பந்து அசோசியேசன்ஸ் தெரிவித்துள்ளது.