ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி 2016இல் விவாகரத்துக்கு விண்ணப்பித்தபின், குழந்தைகளை பராமரிப்பதற்காக எவ்வகையிலும் உதவவில்லை என்று ஜோலியின் வழக்கறிஞர் கூறியதற்கு, அவரது கணவர் நடிகர் பிராட் பிட் தரப்பு வழக்கறிஞர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஜோலிக்கு, பிட் 1.3 பில்லியன் டாலர் பணமும், வீடு வாங்க எட்டு மில்லியன் டாலர் கடனும் வழங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
2005 முதல் ஒன்றாக வாழ்ந்து வந்த அவர்கள் 2014இல் திருமணம் செய்து கொண்டனர்.