கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவு உள்ளிட்ட பொருட்களை ஏற்றி வந்த சுமார் 20க்கும் மேற்பட்ட லாரிகளை தமிழக-கேரள எல்லையான நெல்லை மாவட்டம் புளியரை சோதனைச்சாவடி அருகே போலீசார் நிறுத்தி வைத்திருந்தனர்.
அந்த வாகனங்கள் அனைத்தும் சுகாதாரத் துறையினர் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. அந்த வாகனங்களை அவர்கள் சோதனையிட்டு வருகின்றனர்.
இதை அடுத்து சுகாதாரத் துறை, உள்ளாட்சி துறை , காவல்துறை அதிகாரிகள் முகாமிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.