ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் இன்று வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதில் 18,600 அரசு மருத்துவர்கள் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில்தான் மருத்துவர்களுக்கு குறைந்த சம்பளம் வழங்கப்படுவதாகவும், கடந்த 10 ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை எனவும் மருத்துவர்கள் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
எனவே இன்று தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.