கலப்பட பால் விற்பனையாளர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கலப்பட பால் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – என்று சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை செய்துள்ளது.
கலப்பட பால் விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய வழக்கில் தமிழக அரசின் அறிக்கை அரைகுறையாக இருப்பதாக நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர் .
கலப்பட பால் தொடர்பாக இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன?, வழக்குகளின் தண்டனை விவரங்கள் குறித்து வரும் 21-க்குள் அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது சென்னை உயர்நீதிமன்றம் .