கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் அளித்த கண்மூடித்தனமான தீர்ப்பை அடுத்து, அதற்கு எதிராக கேரள மாநிலம் மற்றும் தென் மாநிலங்களில் போராட்டம் வலுத்துள்ளது. ஹிந்துக்களின் உணர்வைப் புண்படுத்தியுள்ள இந்தத் தீர்ப்பை அடுத்து ஹிந்துக்களின் உணர்வுகளை கொச்சைப் படுத்துவதையே தொழிலாகக் கொண்ட கம்யூனிஸ்ட்கள், கிறிஸ்துவர்கள் பின்னணியுடன் இயங்கக் கூடிய பெண்கள் சிலர், சபரிமலைக்கு செல்ல முயன்றனர். ஆனால், பக்தர்களின் போராட்டம் காரணமாக பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் எதிர்ப்பை மீறி சபரிமலைக்கு செல்வோம் என பெண்கள் அமைப்புகள் சில போராடி வரும் நிலையில் அதே பெண்களில் சிலர் சபரிமலைக்கு பெண்கள் செல்லக்கூடாது என்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சபரிமலை பாதுகாப்புக் குழுவில் இருந்த பெண்கள் சார்பில் நேற்று தீபம் ஏற்றி போராட்டம் நடத்தினர். கேரளாவில் உள்ள களியக்காவிளையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தை பிரபல மலையாள நடிகரும் எம்.பியுமான சுரேஷ் கோபி தொடங்கி வைத்தார்.
தமிழகத்திலும் ஐயப்ப சேவா சங்கம் சார்பில் சபரிமலை ஐயப்பன் கோவிலை காக்க விளக்கேற்றும் நிகழ்ச்சி நடந்தது. உச்ச நீதிமன்றத்தில் தமிழகத்தில் பல்வேறு தரப்பினர் மற்றும் இந்து அமைப்புகள், குருமார்கள் மத்தியில் எதிர்ப்பு வலுத்தது. இந்நிலையில், சபரிமலைக்கு ஆதரவாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இந்து முன்னணி, மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் விளக்கேற்றும் போராட்டம் நடைபெற்றது. கொடைக்கானலில் நேற்று மாலை மூஞ்சிக்கல் மாரியம்மன் கோயிலில் ஐயப்ப சேவா சங்க நிர்வாகிகள் மற்றும் பெண்கள் ‘சபரிமலையை காப்போம்’ என, சரணம் கோஷம் எழுப்பி விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர்.