சதுரகிரி கோயிலுக்கு பிளாஸ்டிக் பை கொண்டு சென்றால் அபராதம் விதிக்கப்படும் என்று வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே வனப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பிளாஸ்டிக் பை உள்ளிட்ட தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பக்தர்கள் கொண்டு சென்றால் அபராதம் விதிக்கப்படும் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.