என்ன அநியாயம் இது.. என்ன அநியாயம் என்று திமுக., மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் பேசும்போது அருகே வந்து சத்தம் போட்டுக் கேட்கும் வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.
என்ன அநியாயம் இது…
பொதுப்பிரிவில் உள்ள ஏழைகளுக்கும் இட ஒதுக்கீடு கொடுக்கும் ஆளும் அரசின் முடிவு என்ன அநியாயம் இது?!
ஏழைகளுக்கு எதற்கு இட ஒதுக்கீடு? என்ன அநியாயம் இது?
ஏழைகளுக்கு கொடுக்கும் இட ஒதுக்கீட்டுக்கு கம்யூனிஸ்ட் கட்சி எப்படி ஆதரவு தெரிவிக்கலாம்…? என்ன அநியாயம் இது?
திமுக., கூட்டணியில் இருந்து கொண்டு திமுக., எடுத்த முடிவுக்கு மாறாக கம்யூனிஸ்ட் கட்சி எப்படி செயல்படலாம்? என்ன அநியாயம் இது?
கூட்டணிக்கு தலைமை வகிக்கும் காங்கிரஸ், கூட்டணியில் உள்ள திமுக.,வின் பேச்சையே கேட்காமல் இருக்கிறதே! என்ன அநியாயம் இது?
நாங்கள் சொல்வதைக் கேட்காமல் இப்படி தன்னிச்சையாக முடிவு எடுத்தால் கூட்டணியில் நீங்கள் எல்லாம் இருப்பது எதற்கு? என்ன அநியாயம் இது?
இப்படி பலவித அநியாயங்களை கம்யூனிஸ்ட் கட்சியினர் செய்துவிட்டதால், திமுக., எம்.பி., கனிமொழி அவையில் டி.கே.ரங்கராஜன் அருகே போய் சத்தம் போட்டு… என்ன அநியாயம் இது என்று மிரட்டுகிறார். ஆனால் அவரது மிரட்டலுக்குப் பணியாமல் டி.கே.ரங்கராஜன் அநியாயத்துக்கு தனது பேச்சை அழுத்தம் திருத்தமாக சத்தமாக ஓங்கிப் பேசியபடி தொடர்கிறார்….
இப்போதைய சமூக வலைத்தள வைரல் ட்ரெண்டிங் இதுதான்…
ஆமாம்.. என்ன அநியாயம் இது?!
கம்யூனிஸ்ட்டான டி.கே.ரங்கராஜன் 10% இடஒதுக்கீடை ஆதரித்து பேச….. பதறிப்போய் “இது என்ன அநியாயம் இது” என்று கனிமொழி கேட்கும் வீடியோதான் இப்போதைய வைரல் ட்ரெண்டிங்…