கடலூர் மாவட்டம், மங்கலம்பேட்டையில், சுவாமி விவேகானந்தர் நற்பணி மன்றத்தின் சார்பாக சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாள் விழா தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் அனைத்துக் கட்சி பிரமுகர்களும் அனைத்து இயக்கத் தோழர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் விழா இன்று நாடு முழுவதும் தேசிய இளைஞர் தின விழாவாகக் கொண்டாடப் பட்டது.