வரும் ஜன.22ம் தேதி பெருந்திரள் ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது ஜாக்டோ ஜியோ. இதுகுறித்து அது வெளியிட்ட அறிவிப்பில்,
பெருந்திரள் ஆர்ப்பாட்டம் ஜாக்டோ ஜியோ சார்பில் எதிர்வரும் 22.01.2019 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதை அறிவோம்.
போராட்டத்தினை வலுவாக நடத்திட ஆயத்தமாக 18.1.2019 (இன்று) மாலை நேர பெருந்திரள் ஆர்ப்பாட்டம் திட்டமிடப்பட்டு உள்ளது.
எனவே சென்னை மாவட்டம் சார்பாக எழிலம் வளாகம் – சேபப்பக்கம் ஆவின் பாலகம் முன்பு மாலை 4.30 பெருந்திரளாக
ஆசிரியர்களும் , அரசு ஊழியர்களும் கலந்து கொண்டு கோரிக்கைகளை வென்றெடுக்க ஆயத்தமாக வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறோம். என்று சென்னை மாவட்ட ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.