மதுரை: எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டப்படும் இந்நாள் ஒரு பொன்னாள் என்று கூறியுள்ளார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.
இன்று மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டும் விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்து கொண்டு, மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டிப் பேசுகிறார் பிரதமர் நரேந்திர மோடி.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் விஜயபாஸ்கர், இந்தியாவின் மருத்துவ தலைநகர் சென்னை என்ற புகழ் எய்ம்ஸ் அமையவுள்ள மதுரைக்கு மாறும்! எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டப்படும் இந்நாள் ஒரு பொன்னாள் என்று கூறியுள்ளார்.