இன்றே பாகிஸ்தான் தூதரகத்தை மூடிவிடவும் என்று யோசனை கூறியுள்ளார் பாஜக., மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி.
ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு வியாழக்கிழமை நேற்று மாலை 3 மணிக்கு புல்வாமா மாவட்டத்தில் துணை ராணுவப் படையினர் பேருந்தில் சென்றனர். அப்போது, அவந்திபோரா நெடுஞ்சாலையில் பேருந்து சென்றபோது, அதன் மீது பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ மொஹம்மத் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப்படை பயங்கரவாதி 350 கிலோ வெடிபொருட்களுடன் வெடிக்கச் செய்தார்.
இந்தத் தாக்குதலில் பேருந்தில் பயணம் செய்த 40க்கும் மேற்பட சிஆர்பிஎப் வீரர்கள் தங்கள் உயிரை இழந்துள்ளனர். படுகாயமடைந்த 38 சிஆர்பிஎப் வீரர்கள், பாதாமிபாக் பகுதியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பாஜக., மூத்த தலைவர் டாக்டர் சுப்பிரமணியம் சுவாமி டிவிட்டர் பதிவுகளில் வரிசையாக தனது கருத்துகளைப் பதிவுசெய்து வந்தார்.
பாகிஸ்தானுடனான வர்த்தகத்தை துண்டிக்க வேண்டும் என்று வெகுநாட்களாக கோரிக்கை வைத்தவர் சு.சுவாமி. மேலும், பாகிஸ்தானுக்கான தாராள வர்த்தக நாடு என்ற அந்தஸ்தை நீக்கிவிட வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார். அவரது கோரிக்கையை, இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர்தான் மத்திய அரசு செவிமடுத்து அறிவித்துள்ளது.
நாடு பேசுகிறது. பழிவாங்கலுக்கு அல்ல, பதிலடி கொடுக்க! ஒன்றுக்கு ஒன்றாக அல்ல, எதிர்கால நலன் கருதி ஒட்டுமொத்தமாக! இப்போது நாம் வேறு வகையில் சிந்திக்க வேண்டும். தில்லியில் பலுசிஸ்தான் தூதரகத்தைத் திறக்கவேண்டும்! பாகிஸ்தான் தூதரகத்தை மூடிவிடுங்கள்! என்று கூறியுள்ளார் சுவாமி.
The nation has spoken. Not for revenge but retaliation. Not proportionate but disproportionate devastation as a deterrent for the future. Open emigre Baluchistan embassy in Delhi for a start. Close down Paki Embassy today
— Subramanian Swamy (@Swamy39) February 14, 2019
மேலும், வர்த்தக நாட்டுக்கான அந்தஸ்தை திரும்பப் பெற்றுள்ளீர்கள் நன்றி. இப்போது பாகிஸ்தான் ஒரு பயங்கரவாத நாடு என்று இந்தியா அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும்! இப்போதே இப்போதே… இப்போதே! நாளை அல்ல! இன்று! என்று கூறி ஒரு கருத்தை ரிடிவீட் செய்து, அதை பலருக்கும் டேக் செய்திருக்கிறார் சுவாமி!