காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலைப் பாராட்டிய அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர் மீது காவல்துறை வழக்கு பதிவுசெய்துள்ளது.
ராணுவ வீரர்கள் 40க்கும் மேற்பட்டோர் தங்கள் இன்னுயிரை இழந்த நிலையில், நாடே சோகத்திலும் கொந்தளிப்பிலும் ஆழ்ந்திருக்கும் நிலையில், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த பாசிம் ஹிலால் என்னும் மாணவர் புல்வாமா தாக்குதல் குறித்து, ”ஜெய்ஷ்- எப்படி? க்ரேட் #காஷ்மீர் #புல்வாமா” என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
இது குறித்து மேலும் சில ட்வீட்களையும் அவர் பதிவேற்றியிருந்தார். காஷ்மீரின் பீர்வா பகுதியைச் சேர்ந்த ஹிலாலின் ட்வீட் பலத்த சர்ச்சைகளுக்கு உள்ளானது. இந்நிலையில், அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகம், அவரை இடை நீக்கம் செய்து உத்தரவிட்டது.
இதனிடையே அலிகர் காவல்துறை அவர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது. தொழில்நுட்ப சட்டப்பிரிவு 153ஏ மற்றும் 67ஏ ஆகியவற்றின் கீழ் ஹிலால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
JUST IN: Aligarh Muslim University (AMU) suspends its student Basim Hilal for posting objectionable comments on social media against soldiers who got martyred in #PulwamaAttack. Suspension is subject to verification of his Twitter account, says Proctor. pic.twitter.com/AT2UsfedhP
— The Leaflet (@TheLeaflet_in) February 15, 2019