spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்மத்திய ரயில்வே பட்ஜெட் 2016-2017: முக்கிய அம்சங்கள்!

மத்திய ரயில்வே பட்ஜெட் 2016-2017: முக்கிய அம்சங்கள்!

- Advertisement -

புது தில்லி:
இன்று மக்களவையில் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவால் தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில் பயணிகளுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்புகள் சில இடம்பெற்றுள்ளன.

மூத்த குடிமக்களுக்கு லோயர் பர்த் – கீழ்படுக்கை வசதி 50 சதவீதம் அதிகரிப்பு, லோயர் பெர்த் முன் பதிவில் பெண்களுக்கு முன்னுரிமை, இணையதள சேவை அதிகரிப்பு, ரயில் நிலையங்களில் வை-ஃபை வசதி அதிகரிப்பது, ரயில்களில் எப்.எம்., பண்பலை ரேடியோ வசதி உள்ளிட்டவை மகிழ்ச்சி அளிக்கும் அறிவிப்புகள்.

சிசிடிவி கேமரா வசதியை அதிகரிப்பதன் மூலம் பயணிகளின் பாதுகாப்பு அதிகரிப்பு.

தட்கல் முன்பதிவில் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிப்பு.

நீண்ட தூர ரயில்களில் முன்பதிவு செய்யாத 2 முதல் 4 பெட்டிகள் இணைப்பு.

ரயில் நிலையங்களில் தேவையானவர்களுக்கு வெந்நீர் வழங்கல்!

ரயில் நிலைய ஓய்வறைகளை ஆன்லைனிலேயே புக் செய்யும் வசதி

முன்பதிவு செய்யப்பட்ட பயணச் சீட்டை ரத்து செய்ய உதவி எண் 139 அறிமுகம்

பல்வேறு வசதிகள் கொண்ட ஸ்மார்ட் ரயில்கள் அறிமுகம்

முன்பதிவு அறவே இல்லாத ரயில்கள் சாமான்ய மக்களுக்காக இயக்கப்படுதல்.

ரயில் பயணிகளின் பொழுது போக்குக்காக பெட்டிகளில் பண்பலை எப்.எம். வானொலி வசதி

பயணச்சீட்டு முன்பதிவின் போது பயணக் காப்பீட்டுக்கான வாய்ப்பு

சமூக இணையதளங்களின் மூலம் புகார் பெற்று குறைகளை தீர்க்க முக்கியத்துவம்

நெரிசல் மிகுந்த பாதைகளில் இரட்டை அடுக்கு ரயில்

முன்பதிவு செய்யாத பெட்டிகளிலும் செல்போன் சார்ஜ் செய்ய வசதி

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரயில்களில் 17 ஆயிரம் பயோ-டாய்லெட்கள்

பயணிகளின் வீட்டுக்கே சரக்குகளைக் கொண்டு சேர்க்கும் இ-வணிக முறை

சென்னை – தில்லி இடையே புதிய சரக்கு ரயில் பாதை

பயணிகள் ரயில் கட்டணம் மூலம் ரூ.51,012 கோடி திரட்ட இலக்கு

திருப்பதி, வாராணசி, நாகப்பட்டினம், அஜ்மீர், கயா, மதுரா உள்ளிட்ட புனித தலங்களில் ரயில் நிலையங்கள் அழகுபடுத்தல்

எஸ்எம்எஸ் அனுப்பப் படுவதன் மூலம் ரயில் பெட்டிகளை சுத்தப்படுத்தும் வசதி

முக்கிய ரயில் நிலையங்களில் பார் கோடு பயணச் சீட்டுகள் வழங்கப்படுதல்

சேட்டிலைட் மூலம் ரயில்வே திட்டங்கள் கண்காணிப்பு

வெளிநாட்டு டெபிட், கிரடிட் கார்டுகள் மூலம் முன்பதிவு

ரயில்வே நிலையங்களில் மருந்தகம் அமைக்கப்படுதல்

குழந்தைகளுடன் பயணிக்கும் பெண்களுக்கு பால் பொருட்கள் வழங்கப்படுதல்

2020 ல் ஆள் இல்லா ரயில்வே கிராசிங்குகள் முற்றிலும் ஒழிக்கப்படுதல்

முன்பதிவு இல்லாத அதிவேக ரயில் இயக்கப்படுதல்

அனைத்து வகுப்புகளிலும் பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீடு

முக்கிய ரயில்வே ஸ்டேஷன்களி்ல் கண்காணிப்பு காமிரா

தற்போது 100 ரயில்வே ஸ்டேஷனில் வைஃபை வசதி

நிமிடத்திற்கு 7 ஆயிரத்து 200 டிக்கெட்டுகள் ஆன்லைனில் விநியோகம்

வெளிப்படையான நிர்வாகத்திற்கு சமூக வலை தள பயன்பாடு

2 ஆண்டுகளில் 400 ரயில்வே ஸ்டேஷனில் வைஃபை வசதி

475 ரயில்வே ஸ்டேஷன்களில் 17 ஆயிரம் பயோ டாய்லெட்

வட கிழக்கு மாநிலத்திற்கு முக்கியத்துவம்

2800 கி.மீட்டர் ரயில்வே பாதை அமைக்க இலக்கு

2,500 கி.மீட்டர் அகல ரயில்பாதை அமைக்க இலக்கு

ரயில்வே பட்ஜெட் மதிப்பீடு 1. 21 லட்சம் கோடி

ரயில்வேயில் பெண்கள் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம்

ரூ. 40 ஆயிரம் கோடி செலவில் 2 ரயில்வே தொழிற்சாலைகள் துவக்கப்படுதல்

வரும் நிதி ஆண்டில் 10 சதவீதம் வருவாய் பெருக்க திட்டம்

17ஆயிரம் பயோ கழிவறைகள் அமைக்கப்படும்

400 ரயில் நிலையங்கள் அரசு- தனியார் கூட்டு முயற்சியால் மேம்படுத்த திட்டம்

ரயில்வே கேட்டரிங் பணியில் பெண்களுக்கு 33 சதவீத வாய்ப்பு

– உள்ளிட்ட அறிவிப்புகளை இன்றைய பட்ஜெட் உரையில் தெரிவித்த சுரேஷ் பிரபு, கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 139 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,100SubscribersSubscribe