spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாஇம்ரானுக்கு ஆதரவாக பிரசாரம்! பேராசிரியரை மண்டியிட வைத்த ஏபிவிபி மாணவர்கள்!

இம்ரானுக்கு ஆதரவாக பிரசாரம்! பேராசிரியரை மண்டியிட வைத்த ஏபிவிபி மாணவர்கள்!

- Advertisement -

பெங்களூரு: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பிரசாரம் செய்த கர்நாடக மாநில பேராசிரியருக்கு ஏபிவிபி., அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் மண்டியிட வைத்து தண்டனை வழங்கினர்.

கர்நாடக மாநிலம், விஜயபுரா மாவட்டத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார் சந்தீப் வத்தார். இவர் தனது பேஸ்புக் பக்கத்தில் இம்ரான் கானுக்கு ஆதரவாக பிரார்த்திப்பதாகவும், மத்தியில் ஆளும் பாஜக, அரசை கடுமையாக விமர்சித்தும் கருத்துப் பதிவு செய்திருந்தார்.

இது மாணவர்கள் மத்தியில் பெரும் இதனை கொந்தளிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக, புல்வாமா மற்றும் பாலகோட் தாக்குதல் தொடர்பாக நாட்டுக்கு எதிரான கருத்தை பிரசாரம் செய்ததால் கடும் கோபம் அடைந்தனர் மாணவர்கள்.

இந்நிலையில், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள், பேராசிரியருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதை அடுத்து, அவரை முழங்கால் போடச்சொல்லி நாட்டுக்கு எதிராக இனி பேச மாட்டேன் எனச் சொல்ல வைத்து, மன்னிப்பு கேட்க வைத்தனர். பின்னர் அவர் சஸ்பெண்டும் செய்யப்பட்டுள்ளார்.

[su_highlight]பெங்களூர் #நகர்புற_நக்சலைட் பேராசிரியர், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை புகழ்ந்தும் இந்தியாவை தரம் தாழ்த்தியும் பாரத பிரதமர் மோடியை தாக்கியும் கருத்துகள் எழுதியவர். ABVP அவரை #மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வைத்தது.[/su_highlight]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe