இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயருக்கு கொலை மிரட்டல் விடுக்கப் பட்டுள்ளது.
இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயருக்கு ஜெய்ஷ் இ மொஹம்மத் அமைப்பு கொலை மிரட்டல் விடுத்துள்ளது. மோடிக்கு ஆதரவு அளித்தால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளது.
புல்வாமா தாக்குதலை நடத்திய பாகிஸ்தானில் இருந்து செயல்படும் சர்வதேச இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ -மொஹம்மத் அமைப்பின் பெயரில் அனுப்பப்பட்டுள்ள கொலை மிரட்டல் கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
75 வயதாகும் மாதவன் நாயர், கடந்த 2009-ஆம் ஆண்டு வரை இஸ்ரோ தலைவராக இருந்தார்! கடந்த ஆண்டு பாஜக.,வில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இவருக்கு 2 நாட்களுக்கு முன் ஒரு கடிதம் வந்துள்ளது. அதில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக இருந்தால் கொலை செய்து விடுவோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கடிதம் ஜெய்ஷ் இ மொஹம்மத் பயங்கரவாத இயக்கத்தின் பெயரில் அனுப்பப் பட்டுள்ளது.
இதையடுத்து மாதவன் நாயர் கேரள போலீஸில் புகார் அளித்தார். இந்தக் கொலை மிரட்டல் குறித்து உளவுத்துறை தமக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்!