அண்மையில் பிரதமர் மோதி, நானும் பாதுகாவலன் தான் என்ற இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். மே பி சௌகிதார் எனும் இந்த நிகழ்ச்சியில், தேசத்தின் பாதுகாவலர்களாக நாம் அனைவருமே தோள்கொடுப்போம் என்று கூறியிருந்தார். ஓவ்வொரு துறையில் இருப்பவர்களும் தங்களை தேசத்தின் பாதுகாவலர்களாக உணரவேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.
இதை அடுத்து இந்த இயக்கம் பெரிதாக வளர்ந்தது. இது குறித்த விளம்பரப் படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றன.
இந்நிலையில் இன்று மாலை பாஜக., நிர்வாகிகளுடன் பேசுவதாக அவர் அறிவித்திருந்தார். காணொளிக் காட்சி மூலம், நிர்வாகிகளுடன் அவர் கலந்து கொண்டு பேசும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில், மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.