கருத்துக்கணிப்புகள் திமுகவால் திணிக்கப்பட்டவை என்று ஜெயக்குமார் கூறியுள்ளார்.
தேர்தல் கருத்துக் கணிப்புகள் அனைத்துமே, திமுகவால் திணிக்கப்பட்டவையே என மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை புளியந்தோப்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில் திமுக., திணிக்கும் கருத்துகள் இவை என்று கூறினார். மேலும், தனி நபர் விமர்சனம் முற்றிலும் தவிர்க்கப்படும் வகையில் தேர்தல் ஆணையம் இரும்புக் கரம் கொண்டு அவற்றை அடக்க வேண்டும் என வலியுறுத்தினார்.