ஓய்வு பெற்ற அதிகாரி பொன் மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக நியமித்து சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், சிபிஐ வசம் வழக்குகளை மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்தது.
மேலும், பொன் மாணிக்கவேல் சிறப்பு அதிகாரியாக தொடர எந்த தடையும் இல்லை என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.