தமிழகத்தில் பிரசாரம் நாளை மாலை 5 மணி யுடன் ஓய்கிறது: தேர்தல் கமிஷன் தீவிர கண்காணிப்பு பாதுகாப்பு பணிக்கு துணை ராணுவம் வருகை*
தமிழகத்தில் நாளை பிரசாரம் ஓய இருக்கும் நிலையில், இறுதிக்கட்ட பண பட்டுவாடாவை தடுக்க தேர்தல் கமிஷன் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், தமிழகத்தில் காலியாக உள்ள 22 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் காலியாக உள்ள ஒரு சட்டசபை தொகுதிக்கும் வருகிற 18-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது.