தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச் சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.
தேனி மாவட்டம், பெரியகுளம் செவன்த்டே பள்ளியில் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
முன்னதாக, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாக்களிக்க வேண்டிய பெரியகுளம் வாக்குச்சாவடியிலும் வாக்கு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால், வெகுநேரமாக கோளாறைச் சரி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இதனால் ஓபிஎஸ் உடனடியாக வாக்களிக்க இயலாமல் போனது.