சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் குடும்பத்தோடு வாக்களித்தார்.. #Vijayakanth | #ElectionDay | #TNElection2019
தேமுதிக., தலைவர் விஜயகாந்த், இன்று காலை தனது வாக்கினைப் பதிவு செய்தார். உடல் நலக் குறைவால் அவதிப்பட்ட விஜயகாந்த், இந்த முறை பெரிதாக பிரசாரம் செய்யவில்லை. கடைசி நாளில் மூன்று இடங்களில் மட்டும் பிரசாரம் செய்ய தலையைக் காட்டிவிட்டு, அதிமுக., கூட்டணி வேட்பாளர்களுக்கு பிரசாரம்செய்துவிட்டுச் சென்றார்.
இந்நிலையில், இன்று காலை மனைவி பிரேமலதா விஜயகாந்த்துடன் சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச் சாவடிக்கு வந்திருந்த விஜயகாந்த், பின்னர் தன் வாக்கினைப் பதிவு செய்து விரல் காட்டி பெருமிதப் பட்டார்.