கச்சத்தீவில் தேவாலயம் கட்டும் முயற்சியை தடுக்க கோரி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். கச்சத்தீவில் பழைய தேவாலயத்தை இடித்துவிட்டு புதிய தேவாலயத்தைகட்ட இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. கச்சத்தீவு தேவாலயம் செல்லும் தமிழர்களின் ஆலோசனையை இலங்கை அரசு கேட்கவில்லை எனவும் கடிதத்தில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவும் இலங்கையும் சேர்ந்து தேவாலயத்தை புதிப்பிக்கலாம் என தமிழக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழக மீனவர்களை ஆலோசிக்காமல் இலங்கை தேவாலயம் கட்டுவது பதற்றத்தை ஏற்படுத்தும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார். தமிழக மீனவர்களின் ஒப்புதலை பெற்று தேவலாயத்தை கட்ட மோடிக்கு ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.