வாடிப்பட்டி அருகே உள்ள சாணாம்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் இரவு பணி முடிந்து தனது மனைவியுடன் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் கார்த்திக் மனைவி அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினர்.
இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த இருவருக்கும் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து இருவரும் காவல்நிலையித்தில் புகார் செய்தனர். காவலர் வழக்குப்பதிவு செய்து, திருடர்களை தேடி வருகின்றனர்.