spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉள்ளூர் செய்திகள்மாபெரும் மாற்றத்தை தமிழகத்தில் உருவாக்க... இந்த பொங்கல் திருநாள் தித்திப்பாக அமையட்டும்!

மாபெரும் மாற்றத்தை தமிழகத்தில் உருவாக்க… இந்த பொங்கல் திருநாள் தித்திப்பாக அமையட்டும்!

- Advertisement -

முன்னாள் மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் விடுத்துள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில்….

அன்பான தமிழ்ச் சொந்தங்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். வருகின்ற காலம் தமிழகத்தின் பொற்காலமாக மாறுவதற்கு இந்த பொங்கல் திருநாள் ஒரு வழி திறந்துவிடுகின்ற பாதையாக அமையும் என்று நான் முழுமையாக நம்புகின்றேன்.

இந்த பொங்கல் திருநாளில் உங்கள் வீடுகளில் குதூகலம் குலுங்கவும் இறைவனுடைய அருள் உங்கள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் கிட்டுகின்ற வகையிலும் அன்னை பராசக்தி அருள் புரிய வேண்டுமென்று பிரார்த்திக்கின்றேன்.

இந்த பொங்கல் திருநாளை நீங்கள் கொண்டாடும் போது, உங்கள் குடும்பத்தினருடைய முன்னேற்றத்திற்காக, தமிழ்ச் சமுதாய முன்னேற்றத்திற்காக மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் நாட்டிற்காகவும், இந்திய திருநாட்டிற்காகவும், நீங்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும். உங்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும், தமிழகம் ஊழலற்ற, தூய்மையான, நேர்மையான ஒரு நிர்வாகத்தை காணவேண்டும்.

இந்திய அளவில் நம்முடைய பிரதமர் மரியாதைக்குரிய நரேந்திர மோடி அவர்கள் எடுத்து வருகின்ற நாட்டிற்கான, தமிழர்களுக்கான முன்னேற்றத்திற்கு இறைவனுடைய அருள் கிட்ட வேண்டும், நாம் அதற்கு பிரதமரருக்கு துணையாக இருக்க வேண்டும் என்கின்ற பிரார்த்தனைகளை நீங்கள் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் அரசாங்கம், தமிழினுடைய முன்னேற்றத்திற்காக, தமிழருடைய முன்னேற்றத்திற்காக, தமிழ் நாட்டின் முன்னேற்றத்திற்காக கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏராளமான விஷயங்களை நமக்காக செய்திருக்கின்றார்கள்.

குறிப்பாக பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தமிழின் பெருமையை உலகறியச் செய்ய கூடிய வகையில் ஐக்கிய நாட்டு சபையின் பொதுச் சபையில் பேசியதாக இருந்தாலும் சரிதான், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் அறியாத இந்தி பேசுகின்ற மாணவர்கள் மத்தியில் பேசும்போதாக இருந்தாலும் சரிதான், பல்வேறு மாநில முதலமைச்சர்கள் கூட்டத்தில் பேசும்போதாக இருந்தாலும் சரி தான், எல்லா இடத்திலும் அவர் பேச தவறாத ஒன்று, பேசிக்கொண்டே இருந்த ஒன்று, தமிழை எல்லோரும் பயிலுங்கள், உலகத்தின் முதுமொழி, உலகத்திலேயே மிகப் பழமையான மொழி, சமஸ்கிருதத்தை விட பழமையான மொழியான தமிழை இந்தியா பெற்றிருப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.

அனைத்து இந்தியர்களும் தமிழைப் படிக்க வேண்டும் என்று சொன்னவர் நம்முடைய பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள்.

தமிழர்கள் பாதிக்கப்பட்ட இலங்கையில் இருக்கக்கூடிய நம்முடைய தமிழ்ச் சொந்தங்களுக்கு உரிமைகளை பெற்றுக் கொடுக்கக் கூடிய பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்கள். உலகத்தில் இருக்கக்கூடிய பல்வேறு நாடுகளில் வாழுகின்ற தமிழர்களுக்காக, அவர்களோடு கலந்து பேசி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இன்று நாம் இந்த பொங்கல் திருநாளை ஜல்லிக்கட்டோடு கொண்டாடுகின்றோம் என்று சொன்னால், அதற்கு அடிப்படைக் காரணம் நம்முடைய பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள்.
திமுக, காங்கிரஸ் கூட்டணியின் அரசாங்கம் பாரம்பரியமான தமிழர்களுடைய ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு தடை விதித்தார்கள். மக்கள் மிக வேதனைப்பட்டார்கள்.

அதற்குப் பின்பாக பிரதமர் திரு. நரேந்திர மோடியின் அரசாங்கம் வந்த பின்பு, அந்த அரசின் இணையமைச்சர் என்கின்ற முறையில், நம்முடைய தமிழர்களின் பாரம்பரியமான இந்த விளையாட்டை மீண்டும் நடைமுறைப் படுத்தக் கூடிய அனைத்து முயற்சிகளையும் நான் மேற்கொண்டேன். பிரதமர் திரு. நரேந்திர மோடியினுடைய வழிகாட்டுதலின் அடிப்படையில் ஜல்லிக்கட்டு போட்டி மீண்டும் நடத்துகின்ற உரிமையை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நமக்குத் தந்தார்கள்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே கொண்டாடப்பட்டு கொண்டிருந்தது இந்த ஜல்லிக்கட்டு போட்டியைத் தடை செய்த காங்கிரஸிடம் இருந்து மீட்டு, மீண்டும் ஜல்லிக்கட்டு விளையாட்டை தமிழர்களுக்கு தந்த பெருமை நம்முடைய பிரதமர் நரேந்திர மோடி அவர்களையே சேரும் என்பதை மனதில் கொண்டு, இந்த பொங்கல் விழாவை நாம் கொண்டாடவேண்டும்.

மனதோடு பேசுகிறேன் என்கின்ற நம்முடைய பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுடைய உரையில் தமிழர்களின் பொங்கல் விழாவை குறிப்பிட்டு வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்கள் என்பதும் தற்போது தமிழர்களுக்கு கூடுதல் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.

கடந்த 50 ஆண்டு காலமாக தமிழகத்தில் இருண்ட காலமாக இருந்த நிலை மாறி, இனி வருகின்ற 2021ஆம் ஆண்டு மிக பிரம்மாண்டமான மாற்றங்கள் தமிழகத்திலே உருவாகவும், நேர்மையான நிர்வாகம் அமைவதுடன் நம்முடைய தமிழ்ச் சொந்தங்கள், தமிழ்ச் சமுதாயம் மாபெரும் வளர்ச்சியும், எழுச்சியும் பெற்று கோலோச்சுகின்ற நிலையில் தமிழகத்தில் ஒரு மாபெரும் புரட்சி ஏற்படுத்துகின்ற வகையில் அமைய வேண்டும் என்றும் நாம் பிரார்த்திப்போம். அதற்காக உழைப்போம்.

பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுடைய வழிகாட்டுதலின் அடிப்படையில், தமிழக மக்கள் செயல்பட்டோம் என்று சொன்னால், பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும், காவல்துறைக்கு பாதுகாப்பு கொடுக்க முடியும், தமிழ்ச் சமுதாயமும் உன்னத நிலையை அடைகின்ற வகையிலும், உலகிலேயே பழமையான நமது தமிழ் மொழி, நம்முடைய கலாச்சாரம், பண்பாடு இவையெல்லாம் போற்றுகின்ற வகையிலும் ஒரு மாற்றத்தை தமிழகத்தில் உருவாக்க முடியும், அதற்கு நம்முடைய பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் துணை நிற்பார் என்ற நம்பிக்கையோடு நம்முடைய பணிகளை துவக்குவோம்.

இந்த பொங்கல் திருநாள் அளவற்ற மகிழ்ச்சியை தருவதுடன், ஒரு மாபெரும் மாற்றத்தை தமிழகத்திற்கும், உங்கள் குடும்பத்திற்கும், உங்களுக்கும் ஏற்படுத்தித் தர வேண்டும் என்று வாழ்த்தி அன்னை பராசக்தி பிரார்த்திக்கின்றேன் – என்று பொன். இராதாகிருஷ்ணன் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe