― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉள்ளூர் செய்திகள்மதுரைவிஸ்வ ஹிந்து பரிஷத்தில் இன்று அகண்ட பாரத திவஸ்!

விஸ்வ ஹிந்து பரிஷத்தில் இன்று அகண்ட பாரத திவஸ்!

- Advertisement -
vhp akanda bharath diwas

அகண்ட பாரதத்தை அமைக்க உறுதி பூணுவோம்! என்று, விஸ்வ ஹிந்து பரிஷத் இன்று தினத்தைக் கடைப்பிடிக்கிறது. இது குறித்து விஹெச்பி.,யினர் தெரிவித்த போது….

1947ம் வருடம் ஆகஸ்டு மாதம் 15-ம் தேதி அன்னிய ஆட்சியிலிருந்து நமது பாரத நாடு சுதந்திரம் பெற்றாலும், அந்தத் தருணத்தில் தேசப்பிரிவினை ஏற்பட்டு நமது பாரத நாட்டிலிருந்து ஒரு பகுதி பாகிஸ்தானாக உருவானது.

அப்போது பாகிஸ்தானில் வசித்து வந்த ஹிந்துக்களும் சீக்கியர்களும் லக்ஷக்கணக்கில் விரட்டப்பட்டனர். கொன்று குவிக்கப்பட்டனர்; பெண்கள் கற்பழிக்கப் பட்டனர்; குழந்தைகளும் கொல்லப்பட்டனர்.

தேசப்பிரிவினை என்பது உண்மையான தேச பக்தர்களின் நெஞ்சத்தில் இன்றும் ஒரு சோகமான நிகழ்வாகத்தான் இருந்து வருகிறது. இருப்பினும் அகண்ட பாரதம் என்றேனும் ஒரு நாள் அமைந்தே தீரும்; அதற்கு வாழ்நாள் உள்ளவரையில் பாடு படுவோம் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.

அந்த நம்பிக்கையின்பாற்பட்டு,விஸ்வ ஹிந்து பரிஷத் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்டு மாதம் 14-ம் தேதி “அகண்ட பாரத திவஸ்” சபதம் ஏற்பு தினம்” அனுசரித்து வருகிறது.

“அகண்ட பாரதம் அமைப்போம்; இழந்த நிலப்பரப்பை மீட்போம்; இழந்த கோவில்களை மீட்டு மீண்டும் புனர் நிர்மாணம் செய்வோம்; இழந்த சகோதர சகோதரிகளை மீண்டும் தாய்மதம் திரும்பச் செய்வோம்… என்று கூறினர் விஹெச்பி.,யினர்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version