மீண்டும் தொடங்குகிறது ஐபிஎல்.,
- முனைவர் கு.வை பாலசுப்பிரமணியன்
ஐ.பி.எல் 2021 போட்டிகள் இவ்வருடம் ஏப்ரல் மாதம் 9ஆம் நாள் தொடங்கின. கொரொனா காரணமாக டெல்லி, அஹமதாபாத், மும்பை, சென்னை ஆகிய நகரங்களில் மட்டுமே நடத்தப்பெறும் என அறிவிக்கப்பட்டு, முதல் 29 மேட்சுகள் இந்தியாவில் நடைபெற்றது,
கொரொனா இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரிக்கவே மே மாதம் 2ஆம் தேதிக்குப் பின்னர் மேட்சுகள் நடக்கவில்லை. பின்னர் தொடர் ரத்து செய்யப்பட்டது.
இப்போது ஐ.பி.எல் தொடர் 19ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்குகிறது. இப்போது இந்த ஐ.பி.எல் தொடரின் இரண்டாம் பாதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் துபாய், ஷார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில் நடக்கவுள்ளது.
செப்டம்பர் 19இலிருந்து அக்டொபர் 15 வரை இந்தப் போட்டிகள் நடக்கவுள்ளன. புள்ளிகள் தரவரிசைப் பட்டியலில் டெல்லி கேபிடல்ஸ் (12), சென்னை சூப்பர் கிங்ஸ் (10), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (10) மும்பை இந்தியன்ஸ் (8), ராஜஸ்தான் ராயல்ஸ் (6), பஞ்சாப் கிங்ஸ் (6), கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் (4), சன்ரைஸரஸ் ஹைதராபாத் (2) என்ற வரிசையில் அணிகள் உள்ளன.
டில்லி அணியும் பஞ்சாப் அணியும் இதுவரை எட்டு பொட்டிகள் ஆடியுள்ளன. இனி இன்னமும் ஆறு பொட்டிகள் இந்த இரண்டு அணிகளும் ஆடவேண்டும்.
பிற அனிகள் இதுவரை தலா ஏழு பொட்டிகள் ஆடியுள்ளன. இன்ன்மும் ஏழு போட்டிகள் இவை ஆடவேண்டும். புள்ளிகளின் தரவரிசைப் படி டில்லி, சென்னை, பெங்களூர், மும்பை அணிகள் முன்னணியில் இருந்தாலும், மற்ற அணிகளுக்கும் வாய்ப்பு உள்ளது.
சனி, ஞாயிறு நாட்களில் இரண்டு போட்டிகள், ஏனைய நாட்களில் (தொடக்க நாளைச் சேர்த்து) ஒரு போட்டி நடைபெறும். போட்டிகள் இந்திய நேரப்படி இரவு 2100 மணிக்குத் தொட்ங்கும். சனி, ஞாயிறு தினங்களில் முதல் போட்டி மாலை 1700 மணிக்கு இரண்டாவது போட்டி 2100 மணிக்கும் தொடங்கும். முதல் போட்டி சென்னைக்கும் மும்பைக்கும் இடையே துபாய் மைதானத்தில் நடக்கவுள்ளது.
அதற்குள் இப்போது தேசிய அணியின் T20 அணியின் தலைவர் கோலிக்குப் பிறகு ரோஹித் ஷர்மாதான் என்று ஒருசிலரும், இல்லையில்லை ராகுலை நியமிக்கலாம் என வேறு சிலரும கூறி ரோஹித் ஷர்மாவிற்கு மன அழுத்தம் தரும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.