பீஸ் பாத்
தேவையானவை:
வடித்த சாதம், பச்சைப் பட்டாணி – தலா ஒரு கப்,
பச்சை மிளகாய் – 3, பெரிய வெங்காயம் – ஒன்று,
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய புதினா, கொத்தமல்லித் தழை – தலா கால் கப், நெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
பச்சைப் பட்டாணியை வேகவைக்கவும். பச்சை மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். வாணலியில் நெய் விட்டு சூடாக்கி, இஞ்சி – பூண்டு விழுது, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு சுத்தம் செய்த புதினா, கொத்தமல்லிதழை, உப்பு, வேகவைத்த பட்டாணி, வடித்த சாதம் சேர்த்துக் கிளறி இறக்கினால்… பீஸ் பாத் தயார்!