spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeநலவாழ்வுஅ முதல் னௌ வரை.. அப்பாச்சி தீர்வு!

அ முதல் னௌ வரை.. அப்பாச்சி தீர்வு!

- Advertisement -
health tips 1
health tips 1

இரத்த சுத்திக்கு

செம்பரத்தை இதழ்களோடு கற்கண்டை துள் செய்து கவந்து நீர்ச்சத்து நீங்கும் வரை சில தினங்கள் வெயிலில் காய வைத்தெடுத்து சிறிது ஏலம், லவங்கம் இவற்றைத் தூள் செய்து ஜாடியில் எடுத்து வைத்துக் கொண்டு காலை மாலை வேளைகளில் பத்து கிரெய்ன் அளவு சாப்பிட்டு வர இரத்த சுத்தியும், மன உற்சாகமும் உண்டாகும்.

குங்குமப்பூ சேர்ந்த குல்கந்து மணமும், சுவையும் பெறுவதோடு இரத்த சுத்தியையும் உண்டாக்கும். குங்குமப் பூவை தூள் செய்து 5 கிரெய்ன் அளவு தேனில் குழைத்து சாப்பிட்டு வர இரத்த சுத்தியும் மனதிற்கு உற்சாகமும் ஏற்படும்.

இரத்த சோகையா?

உள் அவயங்களில் ஏற்படும் எல்லாவிதமான அழற்சிக்கும் கரிசி லாங்கண்னி கை கண்ட உணவு. மஞ்சள் காமாலைக்கும். இரத்த சோகைக்கும் பாண்டு ரோகத்திற்கும் இது மிகவும் நல்லது. கரிசலாங் கண்ணி இலையைக் கொண்டு பல் துலக்கி வர பல் நோய் அணுகாது.

கொய்யாப்பழம் சாப்பிட்டு வர இரத்த சோகை குணமாகும். பற்களும்
பலப்படும். அப்பழத்தில் விஷக்கிருமிகளைக் கொல்லும் சக்தி
இருப்பதனால் வியாதியை ஏற்படுத்தும் விஷக்கிருமிகள் இரத்தத்தில்
இருந்தால் அதை உடனே கொன்று விடும்.

கேரட், தக்காளி இவற்றை பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிடலாம். ஆரஞ்சுப் பழத்தையும் அடிக்கடி சாப்பிட சோகை நோய் குணமாகும்.

இரத்தம் விருத்தியடைய…

தான்றிக்காய், நெல்விக்காய். கடுக்காய் இம்மூன்றையும் சம எடை உலர்த்தி தூள் செய்து தயாரிப்பது திரிபலா சூரணம் என்பது. இது வாய்வுத் தொல்லை, இரத்த விருத்தி, வயிற்றுப்போக்கு, சீதபேதி, மூல ரோகங்கள் முதலியவற்றிற்கு மிகவும் நல்லது.

சிறுகீரையை சுத்தம் செய்து பருப்புடன் சேர்த்து சமைத்து அடிக்கடி சாப்பிட்டு வர இரத்த விருத்தி ஏற்படுவதுடன் உடலும் அழகு பெறும்.

கொத்துமல்லிக் கீரையை பசுமையாக வாங்கி வந்து இரண்டொன் றாகக் கிள்ளி நெய்யில் வதக்கி சூடான சாதத்தில் கலந்து சாப்பிட இரும்புச் சத்து ஏராளமாக கிடைத்து இரத்த விருத்தி அடையும்.

நன்னாரி வேரை இடித்துச் சாறெடுத்து பாலில் கலந்து சாப்பிட்டு வர தோல் சம்பந்தப்பட்ட வியாதியையும் இரத்தத்தில் உள்ள கோளாறு களையும் குணப்படுத்தும்.

இரத்தக் கொதிப்புக்கு…

வெள்ளரிப் பிஞ்சை பச்சையாகவோ அல்லது பருப்புடன் சேர்த்து சமைத்தோ சாப்பிடலாம். வெள்ளரிப் பிஞ்சு கிடைக்காத காலத்த வெந்தயக் கீரையை சமைத்து சாப்பிட இரத்தக் கொதிப்பு ‘ குறையும்.

சர்ப்பகந்தி வேரையும் நிலவேம்பின் வேரையும் சமமாக எடுத்துத் தூள் செய்து ஐந்து கிரெய்ன் வரை காலை, மாலை ஆகாரத்திற்கு முன் சாப்பிட்டு வர இரத்த அழுத்த நோய் பூரண குணமடையும்.

முற்றின இஞ்சியை எடுத்து நசுக்கிப் பிழிந்து சாறு எடுத்து அத்துடன் சிறிது தேனையும் கலந்து சாப்பிட தலைச் சுற்றலும் நிற்கும். இரத்த அழுத்தமும் குறையும்.

இஞ்சி சாற்றில் தேனும், சிறிதளவு எலுமிச்சம்பழ ரசத்தையும் சேர்த்து காலை வெறும் வயிற்றில் குறைந்தபட்சம் ஏழு வாரங்கள் சாப்பிட பூரண குணம் தெரியும்.

தினமும் காலையில் பதநீர் சாப்பிட்டு வர இரத்த அழுத்த நோய் மற்றும் இருதய சம்பந்தமான நோய்கள் குணமாகும்.

தினமும் காலையில் ஓர் அவுன்ஸ் துளசிச்சாறு குடிக்க இரத்தக்குழாய் அடைப்பு, இரத்த அழுத்த நோய் விலகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe