ஜீரண பருப்பு சாதம்
தேவையான பொருட்கள்
புழுங்கலரிசி – ஒரு கப்
துவரம்பருப்பு – 3/4 கப்
மிளகு – ஒரு தேக்கரண்டி
சீரகம் – ஒரு தேக்கரண்டி
கடுகு – ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – ஒரு தேக்கரண்டி
மஞ்சள்பொடி – அரை தேக்கரண்டி
நல்லெண்ணெய் – 5 தேக்கரண்டி
வரமிளகாய் – 2
உப்பு, கறிவேப்பிலை – தேவையான அளவு
செய்முறை
ஒரு பானையில் 10 கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். அரிசி, பருப்பு இரண்டையும் கழுவி பானையில் போடவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். மிளகு, சீரகம் பொரித்து எடுத்து, பொடி பண்ணவும்.
சாதம், பருப்பு வெந்ததும் வடிதட்டு போட்டு பழைய முறைப்படி வடித்துக் கொள்ளவும்.
வடித்த சாதத்தை நல்லெண்ணெய் ஊற்றி ஆற விடவும். கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை தாளித்து சாதத்தில் போடவும்.
அதனுடன் பொடித்த மிளகு சீரகம், உப்பு, மஞ்சள் பொடி ஆகியவற்றை சாதத்தில் சேர்க்கவும். நன்றாக கலந்துவிட்டு சாப்பிடவும்.
இந்த பருப்புசாதம் எளிதில் ஜீரணமாகும். இதற்கு எள்ளு துவையல் தொட்டு சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.