சொத்தைப் பற்களுக்கு…
கண்டங்கத்திரிப் பழத்தில் உள்ள விதைகளை சேகரித்து, ஓர் இரும்புக் கரண்டியால் கரி நெருப்பிட்டு அந்த விதைகளை நெருப்பிவிட்டு வரும் புகையை சொத்தைப் பற்களில் படும்படிச் செய்ய பூச்சிகள் வெளியாகி விடும். பல் துலக்குவதற்கு தினமும் வேப்பங்குச்சியைய பயன்படுத்த வாயில் ஏற்படும் புற்று நோயையும் தடுக்கும்.
காலில் கண்ணாடி குத்தி விட்டதா?
கண்ணாடி குத்தின இடத்தில் சிறிது ஓமத்தை வெல்லத்துடன் அரைத்துக் கிளறி வைத்துக் கட்ட எவ்வளவு சிறிய கண்ணாடித் துண்டு ஆனாலும் வெளியே வந்து விழுந்து விடும்.
பேதி நிற்க…
பசு மோர் விட்டரைத்த சுக்கை ஒரு ஸ்பூன் அளவு இருமுறை உட்கொள்ள எந்தவிதமான பேதியாக இருந்தாலும் சரி பேதி நின்று விடும்.
எளிய குடும்பப் கட்டுப்பாட்டுக்கு…
எள்ளும் கறுப்பு வெல்லமும் சேர்த்துச் செய்த எள் உருண்டை பப்பாளிப்பழம், அன்னாசி பழம் இவற்றில் ஏதாவது ஒன்றை) உடலுறவு கொண்ட பிள் பெண் சாப்பிட்டு வந்தால் கருத்தரிப்பதைத் தவிர்க்கலாம்.
நமது உடலின் வலது பக்கம் சூரிய கலையாகவும் இடது பக்கம் சந்திர கலையாகவும் இயக்கங் கொண்டவை. நாம் மாறுகைகளால் மாறு காது பிடிக்கும் போது கைகள் இதயத்தின் மிக நெருக்கத்தில் அமைந்து சூரிய கலை. சந்திரகலை இணைவு சுழற்சி ஏற்பட்டு இதயம் வலுவடைகிறது. இதயநோய்கள் வராது. இல்லறத்தில் ஈடுபடும் பெண்கள் எழுந்தவுடன் தோப்புக்கரணம் போடுவது குடும்பக் கட்டுப்பாட்டை இயற்கை வழியில் செய்கிறது.
வாயு நீங்க…
விளாமரத்தின் கொழுந்து இலைகளை கஷாயம் வைத்து சாப்பிட்டு) வர வயிற்றிலுள்ள வாயு நீங்குவதோடு நல்ல பசியும் எடுக்கும்.