விஷம் நீங்க…
பாம்பு. தேள் முதலிய விஷ ஜந்துக்கள் கடித்து விட்டால் கருடக் கொடிவேரைப் பசும்பாலில் அரைத்து ஒரே வேளை கொடுத்தால் போதும். விஷம் ஏறாது. சிறந்த முதல் உதவி இது.
சூதகக் கோளாறுக்கு…
கர்ப்பப்பை வலுவிழந்து இருந்தாலும் கோளாறு உண்டாகலாம். வாழைப் பூவைச் சமையல் செய்து சாப்பிடுங்கள். பால், மோர் தேன், பேரீச்சை ஆகியவற்றை அதிக அளவில் சாப்பிட்டால் சூதகக் கோளாறுகள் வராது.
காது இரைச்சலுக்கு…
கடல் நுரையை வேப்ப எண்ணெயில் இட்டுக் காய்ச்சி இளம் சூட்டோடு சில துளிகள் காதில் விட காது இரைச்சல் நிற்கும்.
தாகம் தணிய…
கொத்துமல்லி (தனியா) சீரகம், சுக்கு இவற்றைத் தண்ணீரில் போட்டுக் காய்ச்சி வெந்நீராகவோ அல்லது குளிர வைத்தோ சாப்பிட்டு வர சூடு தணியும். தாகத்தைத் தணிக்கும்.
ஒல்லியாக வேண்டுமா?
வாரத்திற்கு இரண்டு நாள்கள் கொள்ளு ரசம் வைத்து சாப்பிட உடல் பருமன் குறையும். தினசரி சாப்பிட வேண்டும்.