இரத்த வாந்திக்கு…
நொச்சிப்பூவை குடிநீரில் கலந்து நான்கு மணிக்கு ஒரு முறை கொஞ்சங் கொஞ்சமாக குடிக்க இரத்த வாந்தி நிற்கும். கஞ்சி மட்டுமே உட்கொள்ள வேண்டும்.
நீர்ச்சுருக்கு போக…
புளியம்பூ, உப்பு, மிளகாயுடன் நெய் சேர்த்து துவையல் செய்து சாப்பிட சூடு தணியும். நீர்ச்சத்து நீங்கும்.
அம்மை நோய் வராது தடுக்க…
தாழம்பூ சர்பத் சாப்பிட அம்மை நோய் வராது தடுத்துக் கொள்ளலாம்.
இஞ்சியின் மகிமை
இஞ்சி பல நோய்களைக் குணப்படுத்துகிறது. அஜீரணம் தொண்டை மூக்கு நோய்கள், ஆஸ்துமா, யானைக்கால் வியாதி, வயிற்றில் கட்டி. கல்லீரல் நோய்கள். பாண்டு ரோகம். நுரையீரல் நோய்கள், மல மூத்திரக் கோளாறுகள் ஆகியவற்றை இஞ்சி குணப்படுத்துகிறது.
தொண்டை வலியா?
சுண்ணாம்பும் விளக்கெண்ணெயும் கலந்து அடுப்பில் காய்ச்சி வெது வெதுப்பாக தொண்டையில் தடவி வர தொண்டைவலி குணமாகும்.