மாப்பிள்ளை சம்பாஇட்லி
தேவையான பொருட்கள்
• 3 கப் மாப்பிள்ளை சம்பா அரிசி
1 கப் இட்லி அரிசி · 1 கப் உளுந்து
1 ஸ்பூன் வெந்தயம்
• உப்பு
செய்முறை
•முதலில் மாப்பிள்ளை சம்பா அரிசியை -5 மணி நேரம் ஊறவைக்கவும்.
இட்லி அரிசியை இரண்டு மணிநேரமும் உளுந்தை 1 மணி நேரமும் ஊறவைக்கவும்.
முதலில் உளுந்தையும் அதன்பின் மாப்பிள்ளை சம்பா அரிசியுடன் இட்லி அரிசியையும் ஒன்றாக அரைத்து உப்பு கலந்து எட்டுமணிநேரம் புளிக்கவைக்கவும்.
மாப்பிள்ளை சம்பா இட்லி மாவு தயார். இதனை இட்லி தட்டில் ஊற்றி ஏழு நிமிடம் ஆவியில் வேகவைத்து பரிமாறலாம்.