இன்று பொங்கல் பண்டிகை கோலாகலமாக நாடு முழுதும் கொண்டாடப் பட்டு வருகிறது.
தமிழர்கள் அதிகம் உள்ள இடங்களில் எல்லாம் பொங்கல் பண்டிகை சீரும் சிறப்புமாக தமிழ்ப் பொங்கலாக கொண்டாடப் படுகிறது. வட இந்தியாவில் தமிழர்கள் அதிகம் உள்ள மும்பை டோம்ப்விலி பகுதியில் ரயில் நிலையத்தில் வண்ணக் கோலம் இட்டு பொங்கலுக்கான வண்ணத்தைத் தீட்டியிருந்தார்கள்
உழவுக்கான மாடும், பொங்கல் பானையும் சூரியனும் என பொங்கல் திருநாளின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய வண்ணக் கோலத்தை பலரும் பார்த்து ரசித்துச் சென்றனர்.