பிரதமர் நரேந்திர மோடியின் அபூர்வமான புகைப்படங்களின் தொகுப்பு இது.
மோடி தற்போது நாட்டின் பிரதமராக இருந்தாலும், சிறு வயதில் ஒரு சாது சன்னியாசியைப் போல் வாழ்க்கை நடத்தியவர். சனாதன இந்து தர்மத்தின் மீதான பற்று காரணமாக ஆன்மிக வாழ்க்கையை நாடிச் சென்றவர். இமய மலைச் சாரலில் தன் ஆன்மிக வாழ்வின் நாட்களைக் கழித்தவர்.
பகவத் கீதையில் ஸ்ரீகிருஷ்ணர் சொல்வதைப் போல், ராஜ ரிஷிகளுக்கு உண்டான இலக்கணத்துடன் சாதுத் தன்மை கூடிய ராஜாவைப் போல் வாழ்பவன் இந்த உலகத்துக்கு அமைதியான ஆன்மிக வாழ்க்கையை போதிக்கிறான் என்பதன் இலக்கணமாக வாழ்பவர்.
ஏவம் பரம்பரா ப்ராப்தம் இமாம் ராஜர்ஷயோ விதுஹு என்று பகவத் கீதையின் 4.2ம் சுலோகத்தில் கூறிய படி ஆன்மிகச் சங்கிலியில் பரம்பரையாக வழிவழியாக வந்த சாதுத்தன்மை உடைய அரசர்கள் இந்த யோகக் கலையின் ஆன்மிக ஞானத்தைப் பெற்று தெய்வீகத்துடன் ஒன்றிவிடுவார்கள் என்று சொன்னதைக் கடைப்பிடிப்பவர் மோடி.
தர்மத்தின் வழியில் ஒரு ராஜரிஷியைப் போல் ஆட்சி நடத்தும் மோடிக்கு ஸ்ரீகாசி விஸ்வநாதரின் அருள் மேலும் கூடட்டும். இந்த நாட்டின் ஒவ்வொரு ஆன்மிக நம்பிக்கையுள்ள குடிமகனும் இந்த நாட்டின் உயர்வுக்காகவும் மேன்மைக்காகவும் மோடி பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்திய மண்ணின் புகழ் உலகெங்கும் தழைத்தோங்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வோம்!