மதுரை சித்திரை திருவிழாவில் வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் விழாவில், குடும்பத்துடன் கலந்துகொண்ட இஸ்லாமியர் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது.
மதத்தால் வேறுபட்டிருந்தாலும், இந்த மண்ணில் மூதாதையருடன் தொடர்பு கொண்ட கலாசார நிகழ்வாக, மதுரை சித்திரைத் திருவிழாவைக் காணவந்த இஸ்லாமியருக்கு வாழ்த்தும் பாராட்டும் சமூக வலைத்தளங்களில் எதிரொலித்தது.
இது தான் மத நல்லிணக்கம் என்று பலரும் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்தனர்.