spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைமானங்கெட்ட தமிழனே... மராட்டியனைப் பார்த்து பாடம் படி..!

மானங்கெட்ட தமிழனே… மராட்டியனைப் பார்த்து பாடம் படி..!

- Advertisement -

உலக மக்களின் பார்வை படும்
மெரினாவில்
அண்ணா சமாதி,
எம்ஜிஆர் சமாதி,
ஜெயலலிதா சமாதி,
பெரியார் சிலையென்று
எல்லா எளவும் இருக்குது

எங்கடா அந்த
ராஜராஜ சோழன் சமாதி ?

எங்கடா அந்த
ராஜேந்திர சோழன் சமாதி ?

எங்கடா போனது என்
சூர்யவர்மன் சிலை?

எங்கடா அந்த
குலோத்துங்கன் நினைவிடம்?

எங்கடா போனது அந்த
பாண்டிய மன்னனின்
நினைவு மண்டபம்.?

எங்கடா அந்த
கரிகால சோழனின் சிலை?

எங்கடா இருக்கு என்
வேலுநாச்சியார் சமாதி ?

எங்கதான்டா இருக்கு
சேரன் செங்குட்டுவனின் சமாதி ?

எங்கடா அந்த அழகுமுத்தோட
நினைவு மண்டபம்.?

எங்கு பார்த்தாலும்

அண்ணா அறிவாலயம்
அண்ணாநகர்,
அண்ணா சாலை
அண்ணா சிலை

பெரியார் மண்டபம்
பெரியார் பேருந்து நிலையம்
பெரியார் சாலை
பெரியார் சிலை

எம்ஜிஆர் மணிமண்டபம்
எம்ஜிஆர் பல்கலைகலகம்
எம்ஜிஆர் பேருந்து நிலையம்
எம்ஜிஆர் நகர்
எம்ஜிஆர் நூலகம்
எம்ஜிஆர் சாலை
எம்ஜிஆர் சிலை

அடுத்தால அம்மா, சின்னம்மா
புஜ்ஜிமா,கட்டுமரம்
இப்படி சொல்லியே
நாசமா போங்க..

உலக சாம்ராஜ்யங்களை
வென்றுகாட்டி நம் தேசத்திற்கு
வெள்ளையனைத் தேடி
வரவழைத்த நம்
முன்னோர்களுக்கு சரியான
சிலைகளுமில்லை,
நினைவு கட்டிடங்களும் இல்லை.

அவர்களின் வரலாறும்
வகுப்பறைப் பாடத்திட்டத்தில்
ஒழுங்காக இல்லை

இடையில் வந்த அத்துனை
கழிசடைகளின் வரலாறும்
பாடத்திட்டத்தில்
ஓங்கி ஒலிக்கிறது.

கரிகாலன் கட்டியக் கல்லணை
இன்றுவரை சுற்றுலாத் தலமாக
மாற்றப்படவில்லை.

மாபெரும் கடற்படையை கட்டமைத்து
உலகின் பல நாடுகளை வென்று
மாபெரும் சோழப் பேரரசை நிறுவிய
ராஜேந்திர சோழனை பற்றி
இங்கே கற்பிக்கப்படவில்லை!

ஒவ்வொரு தமிழனும் தினமும்
கோவிலுக்கு செல்கிறான்
அந்தக் கோவிலைக் கட்டியவன்
யாரென்று கூடத் தெரியாமல்

அந்தக் கோவிலைக் கட்டிய
மாமன்னன் தன் பெயரை அதில் பதிவிடாமல்
இருந்தாலும் கூட
அப்பேற்பட்ட அவனது
நடுநிலைத்தன்மையைப்
பாராட்டி நீ அல்லவா
அவனது பெயரை
உலகம் போற்றிட
செய்திருக்க வேண்டும்.?

ஒன்றுமே செய்யாமல்
இருந்துவிட்டாயே
நன்றி கெட்டவனே.

பசுவுக்காக தன் மகனையே
கொன்ற சோழனின்
கல்லறையை பாரடா..

கஜினி முகமதுவை
பதினேழு முறை
ஓடவிட்டு விரட்டிய
நம் சோழனின்
கல்லறையை பாரடா..

தான் கட்டியக் கோவிலில்
தன் பெயரை எழுதாமல்
அதில் வேலை செய்த
சிற்பக்கலைஞர்களின்
பெயரை எழுதி வைத்த
நம் ராஜ ராஜ சோழனின்
கல்லறையை பாரடா..

தெற்காசியாவை ஆண்ட
ஒரு மாமன்னனின்
கல்லறையை நீ வைத்திருக்கும்
கோலத்தைப் பாரடா
மானங்கெட்டத் தமிழனே.

அப்படி என்னாடா இந்த
இடையில் வந்தவன்
உனக்கு செய்துவிட்டான்?

இடையில் வந்த ரெண்டு
நல்ல மனுஷன் கக்கனும்,
காமராஜரும்!

கக்கன் யாரென்று
யாருக்குமே தெரியாது.
காமராஜரை சாதிசங்க
தலைவராய் மாற்றி
வைத்துவிட்டாய்.

மகாராஷ்ட்ராவில் எத்தனையோ
தலைவர்கள் ஆண்டாலும்
இன்றும், முதல் மரியாதை
சத்திரபதி சிவாஜிக்குத்தான்.

அந்த மான உணர்வு
உனக்கு ஏனடா
இல்லாமல் போனது
மானங்கெட்டத் தமிழனே..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe