லிவிங் டு கெதர் முறையில் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்த ‘பிக்பாஸ்’ புகழ் வைஷ்ணவி முறைப்படி தனது காதலரை திருமணம் செய்துகொண்டதாக உலகத்துக்கு அறிவித்திருக்கிறார்!
பிக்பாஸ் சீசன் 2-ல் பலருக்கும் அறிமுகம் இல்லாமல் நிகழ்ச்சிக்கு வந்து பின்னர் பிரபலம் அடைந்தவர்களில் ஆர்.ஜே வைஷ்ணவியும் ஒருவர். அவர் இன்று தனது நீண்ட நாள் காதலரைக் கல்யாணம் செய்து கொண்டுள்ளார்.
விஜய் டிவி.,யில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் ஆர்.ஜேவாக இருந்தவர் வைஷ்ணவி! இவர் சென்ற வருடம் நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இதன் மூலம் பலருக்கும் அறிமுகம் ஆகிவிட்டார். இவர், அஞ்சான் ரவி என்பவரைக் காதலித்து வந்தார். சுமார் 3 வருடங்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், இருவரும் லிவிங் டு கெதர் என சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில், தற்போது அவரது நீண்டநாள் காதலரை கல்யாணமும் செய்து கொண்டுள்ளார். மிகவும் எளிமையான திருமணம் மூலம் இருவரும் சேர்ந்துள்ளனர்.
இவர் வெள்ளிக்கிழமை நேற்று நண்பர்களை அழைத்து பார்ட்டியும் இன்று காலை திருமணமும் செய்து கொண்டுள்ளனர்.
இதை தனது இன்ஸ்டாக்ராம், டிவிட்டர் பக்கங்களில் புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ளார் வைஷ்ணவி. வைஷ்ணவியின் கணவர் அஞ்சான் பைலட்டாக இருக்கிறார்.
Day. Made. https://t.co/k16MhVjrqW
— Vaishnavi Prasad (@Vaishnavioffl) June 15, 2019