Home இலக்கியம் கட்டுரைகள் பாரதி-100: கண்ணன் பாட்டு (4)

பாரதி-100: கண்ணன் பாட்டு (4)

subramania bharati 100 1
subramania bharati 100 1

பாரதியாரின் கண்ணன் பாட்டு
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

பகுதி – 4, கண்ணன் – என் தோழன்.

இனி கண்ணன் பாட்டின் முதல் பாடலையும் அதன் பொருளைக் காணலாம். முதலில் பாடல்.

புன்னாகவராளி – திஸ்ரஜாதி ஏகதாளம் – வத்ஸல ரசம்

பொன்னவிர் மேனிச் சுபத்திரை மாதைப்

புறங்கொண்டு போவ தற்கே – இனி

என்ன வழியென்று கேட்கில், உபாயம்

இருகணத் தேயுரைப் பான்; – அந்தக்

”கன்னன் வில்லாளர் தலைவனைக் கொன்றிடக்

காணும் வழியொன் றில்லேன் – வந்திங்கு

உன்னை யடைந்தேன்” என்னில் உபாயம்

ஒருகணத் தேயுரைப் பான். … 1

கானகத்தே சுற்று நாளிலும் நெஞ்சிற்

கலக்க மிலாதுசெய் வான்; – பெருஞ்

சேனைத் தலைநின்று போர்செய்யும் போதினில்

தேர்நடத் திக்கொடுப் பான்; – என்றன்

ஊனை வருத்திடு நோய்வரும் போதினில்

உற்ற மருந்துசொல் வான்; – நெஞ்சம்

ஈனக் கவலைக ளெய்திடும் போதில்

இதஞ்சொல்லி மாற்றிடு வான். … 2

பிழைக்கும் வழிசொல்ல வேண்டுமென் றாலொரு

பேச்சினி லேசொல்லுவான்;

உழைக்கும் வழிவினை யாளும் வழிபயன்

உண்ணும் வழியுரைப் பான்;

அழைக்கும் பொழுதினிற் போக்குச் சொல்லாமல்

அரைநொடிக் குள்வருவான்;

மழைக்குக் குடை, பசிநேரத் துணவென்றன்

வாழ்வினுக் கெங்கள்கண் ணன். … 3

கேட்டபொழுதில் பொருள் கொடுப்பான்; சொல்லுங்

கேலி பொறுத்திடு வான்; – எனை

ஆட்டங்கள் காட்டியும் பாட்டுக்கள் பாடியும்

ஆறுதல் செய்திடுவான்; – என்றன்

நாட்டத்திற் கொண்ட குறிப்பினை இஃதென்று

நான்சொல்லும் முன்னுணர் வான்; – அன்பர்

கூட்டத்தி லேயிந்தக் கண்ணனைப் போலன்பு

கொண்டவர் வேறுள ரோ? … 4

உள்ளத்தி லேகரு வங்கொண்ட போதினில்

ஓங்கி யடித் திடுவான்; – நெஞ்சில்

கள்ளத்தைக் கொண்டொரு வார்த்தைசொன் னாலங்கு

காறி யுமிழ்ந்திடு வான்; – சிறு

பள்ளத்தி லேநெடு நாளழு குங்கெட்ட

பாசியை யெற்றி விடும் – பெரு

வெள்ளத்தைப் போலருள் வார்த்தைகள் சொல்லி

மெலிவு தவிர்த்திடு வான். … 5

சின்னக் குழந்தைகள் போல்விளை யாடிச்

சிரித்துக் களித்திடு வான்; – நல்ல

வன்ன மகளிர் வசப்பட வேபல

மாயங்கள் சூழ்ந்திடு வான்; – அவன்

சொன்ன படிநட வாவிடி லோமிகத்

தொல்லை யிழைத்திடு வான்; – கண்ணன்

தன்னை யிழந்து விடில், ஐயகோ! பின்

சகத்தினில் வாழ்வதி லேன். … 6

கோபத்தி லேயொரு சொல்லிற் சிரித்துக்

குலுங்கிடச் செய்திடு வான்; – மனஸ்

தாபத்திலே யொன்று செய்து மகிழ்ச்சி

தளிர்த்திடச் செய்திடுவான்; – பெரும்

ஆபத்தி னில்வந்து பக்கத்தி லேநின்று

அதனை விலக்கிடு வான்; – சுடர்த்

தீபத்தி லேவிடும் பூச்சிகள் போல்வருந்

தீமைகள் கொன்றிடு வான். … 7

உண்மை தவறி நடப்பவர் தம்மை

உதைத்து நசுக்கிடுவான்; – அருள்

வண்மையி னாலவன் மாத்திரம் பொய்கள்

மலைமலை யாவுரைப் பான்; – நல்ல

பெண்மைக் குணமுடை யான்; – சில நேரத்தில்

பித்தர் குணமுடை யான்; – மிகத்

தண்மைக் குணமுடை யான்; சில நேரம்

தழலின் குணமுடை யான். … 8

கொல்லுங் கொலைக்கஞ்சி டாத மறவர்

குணமிகத் தானுடை யான்; – கண்ணன்

சொல்லு மொழிகள் குழந்தைகள்; போலொரு

சூதறி யாதுசொல் வான்; – என்றும்

நல்லவ ருக்கொரு தீங்கு நண்ணாது

நயமுறக் காத்திடு வான்; – கண்ணன்

அல்லவ ருக்கு விடத்தினில் நோயில்

அழலினி லுங்கொடி யான். … 9

காதல் விளைய மயக்கிடும் பாட்டினில்

கண்மகிழ் சித்திரத் தில் – பகை

மோதும் படைத்தொழில் யாவினு மேதிறம்

முற்றிய பண்டிதன் காண்; – உயர்

வேத முணர்ந்த முனிவ ருணர்வினில்

மேவு பரம்பொருள் காண்; – நல்ல

கீதை யுரைத்தெனை இன்புறச் செய்தவன்

கீர்த்திகள் வாழ்த்திடு வேன். … 10

இனி கண்ணன் பாட்டின் முதல் பாடலின் பொருளை நாளை காணலாம்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version