Home இலக்கியம் கட்டுரைகள் பாரதி-100: கண்ணன் பாட்டு (8)

பாரதி-100: கண்ணன் பாட்டு (8)

subramania bharati 100 1
subramania bharati 100 1

பாரதியாரின் கண்ணன் பாட்டு
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

பகுதி – 8, கண்ணன் – என் தந்தை

     இந்தப் பாடலும் நொண்டிச் சிந்து பாணியில் அமைந்துள்ளது. இதன் பிரதான ரஸம் அற்புதம் என பாரதியார் குறிப்பிடுகிறார். முதலில் பாடலைக் காண்போம்.

பூமிக் கெனைய னுப்பி னான்; – அந்தப்

பதமண்ட லத்திலென் தம்பிக ளுண்டு;

நேமித்த நெறிப்படி யே – இந்த

நெடுவெளி யெங்கணும் நித்தம் உருண்டே

போமித் தரைகளி லெல்லாம் – மனம்

போலவிருந் தாளுபவர் எங்க ளினத்தார்.

சாமி இவற்றினுக் கெல்லாம் – எங்கள்

தந்தையவன் சரிதைகள் சிறி துரைப்பேன். 1

செவ்வத்திற்கோர் குறைவில்லை; – எந்தை

சேமித்து வைத்த பொன்னுக் களவொன் றில்லை;

கல்வியில் மிகச் சிறந்தோன் – அவன்

கவிதையின் இனிமையோர் கணக்கி லில்லை;

பல்வகை மாண்பி னிடையே – கொஞ்சம்

பயித்தியம் அடிக்கடி தோன்றுவ துண்டு;

நல்வழி செல்லு பவரை – மனம்

நையும்வரை சோதனை செய் நடத்தை யுண்டு. 2

subramanya bharathi

நாவு துணிகுவ தில்லை – உண்மை

நாமத்தை வெளிப்பட உரைப்பதற்கே;

யாவருந் தெரிந்திட வே – எங்கள்

ஈசனென்றும் கண்ணனென்றும் சொல்லுவதுண்டு;

மூவகைப் பெயர் புனைந்தே – அவன்

முகமறி யாதவர் சண்டைகள் செய்வார்;

தேவர் குலத்தவன் என்றே – அவன்

செய்திதெரி யாதவர் சிலருரைப்பார். 3

பிறந்தது மறக் குலத்தில் – அவன்

பேதமற வளர்ந்ததும் இடைக்குலத்தில்;

சிறந்தது பார்ப்பன ருள்ளே; – சில

செட்டிமக்க ளொடுமிகப் பழக்க முண்டு;

நிறந்தனிற் கருமை கொண்டான்; – அவன்

நேயமுறக் களிப்பது பொன்னிறப் பெண்கள்!

துறந்த நடைக ளுடையான் – உங்கள்

சூனியப்பொய்ச் சாத்திரங்கள் கண்டு நகைப்பான். 4

ஏழைகளைத் தோழமை கொள்வான்; – செல்வம்

ஏறியார் தமைக்கண்டு சீறி விழுவான்;

தாழவருந் துன்ப மதிலும் – நெஞ்சத்

தளர்ச்சிகொள் ளாதவர்க்குச் செல்வ மளிப்பான்;

நாழிகைக்கொர் புத்தி யுடையான்; – ஒரு

நாளிருந்த படிமற்றொர் நாளினி லில்லை.

பாழிடத்தை நாடி யிருப்பான்; – பல

பாட்டினிலும் கதையிலும் நேரமழிப் பான். 5

இன்பத்தை இனிதென வும் – துன்பம்

இனிதில்லை யென்றுமவன் எண்ணுவ தில்லை;

அன்பு மிகவு முடையான்; – தெளிந்

தறிவினில் உயிர்க்குலம் எற்ற முறவே,

வன்புகள் பல புரிவான்; – ஒரு

மந்திரியுண் டெந்தைக்கு விதியென்பவன்;

முன்பு விதித்த தனையே – பின்பு

முறைப்படி அறிந்துண்ண மூட்டி விடுவான். 6

வேதங்கள் கோத்து வைத்தான் -அந்த

வேதங்கள் மனிதர்தம் மொழியி லில்லை;

வேதங்க ளென்று புவியோர்- சொல்லும்

வெறுங்கதைத் திரளிலவ் வேதமில்லை;

வேதங்க ளென்றவற் றுள்ளே – அவன்

வேதத்திற் சிலசில கலந்ததுண்டு

வேதங்க ளன்றி யொன்றில்லை – இந்த

மேதினி மாந்தர் சொலும் வார்த்தைக ளெல்லாம். 7

நாலு குலங்கள் அமைத்தான்; – அதை

நாசமுறப் புரிந்தனர் மூட மனிதர்,

சீலம் அறிவு கருமம் – இவை

சிறந்தவர் குலத்தினில் சிறந்தவராம்;

மேலவர் கீழவரென்றே – வெறும்

வேடத்திற் பிறப்பினில் விதிப்பன வாம்

போலிச் சுவடியை யெல்லாம் – இன்று

பொசுக்கிவிட்டாலெவர்க்கும் நன்மையுண்டென்பான். 8

வயது முதிர்ந்து விடினும் – எந்தை

வாலிபக் களையென்றும் மாறுவதில்லை

துயரில்லை; மூப்பு மில்லை – என்றும்

சோர்வில்லை; நோயொன்றும் தொடுவ தில்லை;

பயமில்லை, பரிவொன்றில்லை, – எவர்

பக்கமும்நின் றெதிர்ப்பக்கம் வாட்டுவ தில்லை

நயமிகத் தெரிந்தவன் காண்; – தனி

நடுநின்று விதிச்செயல் கண்டு மகிழ்பான். 9

துன்பத்தில் நொந்து வருவோர் – தம்மைத்

தூவென் றிகழ்ந்து சொல்லி அன்பு கனிவான்;

அன்பினைக் கைக் கொள் என்பான்; – துன்பம்

அத்தனையும் அப்பொழுது தீர்ந்திடும் என்பான்

என்புடை பட்ட பொழுதும் – நெஞ்சில்

ஏக்கமுறப் பொறுப்பவர் தம்மை உகப்பான;

இன்பத்தை எண்ணு பவர்க்கே – என்றும்

இன்பமிகத் தருவதில் இன்ப முடையான். 10

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version