சுவாமி அம்பேத்கர் – விலை ரூ 100/-
எழுதியவர் : பி.ஆர். மகாதேவன்
வெளியீடு: சிஜி பதிப்பகம், சென்னை
தமிழ் இந்து.காமில் வெளியான படைப்புகள். சுவாமி அம்பேத்கர் அரசியல்வாதியாக இருந்து இந்திய அரசியல் சாசனம் வகுத்த அம்பேத்கர் இந்து மதத் துறவியாகியிருந்தால் என்னென்ன சீர்திருத்தங்களைத் தனது மடாலயம் மூலம் முன்னெடுத்திருப்பார் என்ற கற்பனையை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கதை.
விவசாயச் சங்கத் தலைவரின் விசேஷப் பேட்டி விவசாயிகள் சங்கத் தலைவர் மனதில் இருக்கும் உண்மைகளை ஏதேனும் வகையில் ஊடுருவிப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் என்னவெல்லாம் அவர் சொல்லக்கூடும் என்ற கற்பனையின் அடிப்படையில் எழுதப்பட்டிருக்கிறது.
திருவள்ளுவர் ஜெயந்தி- மகாபலிச் சக்கரவர்த்தி ஆண்டுதோறும் திருவோணம் திருநாளில் தன் பிரஜைகளை வந்து பார்த்துச் செல்வதுபோல் திருவள்ளுவர் தனது பிறந்த தினத்தில் தமிழகம் வந்தால் என்ன நடக்கும் என்ற கற்பனையின் அடிப்படையில் இது எழுதப்பட்டுள்ளது.