Home இலக்கியம் கவிதைகள் திருவோணத் திருநாள்!

திருவோணத் திருநாள்!

onam 1
onam 1

அ(ஸ்)த்தம்முதல் ஓணம்வரை
பேணும் திருநாள் !- பலி
தைய்த்யராஜ் பூமிவரும்
ஓணத்திருநாள்!! 01

பிரகலாதன் பேரன்தன்
பூமித் திருநாள்! – ஆஹ்
திருபாதாளம் விட்டுநமை
ஆமித் திருநாள்!! 02

மூவுலகை ஆண்டபலி
ஞாபகத் திருநாள்!-மண
பூவகைகள் வழிகிடத்தி
ஏகிடு திருநாள்!! 03

வாமணன்தான் யாசகனாய்
வந்திட்ட திருநாள்!.-பலி.
தாமுவந்து மூன்றடிமண்
தந்திட்ட திருநாள்!! 04

நின்றகுறள் நெடிதுயர்ந்து
வளர்ந்திட்ட திருநாள்! ‌-அது
குன்றாமல் மண், விண்ணை
அளந்திட்ட திருநாள்!! 05

மிச்சமுள்ள ஓரடிக்கு
இடம் கேட்கையில்- தலை.
உச்சிதந்து சரண்புகுந்த
பீடுடை திருநாள்.!! 06

அமராவதி இந்திரர்க்கே
திருப்பிய திருநாள்!- பொது.
நிமித்தம்பலி பாதாளம்
இருத்திய திருநாள்!! 07

வருடமோர் நாள்மண்ணில்
உலவிடு திருநாள்!- பலி
அருமைமக்கள் இல்லமேகி
அருளிடு திருநாள்!! 08

உணவுவகை நூறுகொண்டு
படைத்திடு திருநாள்!-கவின்
ஆணையோட்டம் நடனம்பாட்டில்
களித்திடு திருநாள்!! 09

மாநிலத்தார் கொண்டாடும்
சமத்துவ திருநாள்!- ஓணம்.
பூநிலத்தோர் மாபலியை
புகழ்ந்திடு திருநாள்!! 10

விந்த்யாவளி மேன்மைகுணம்
புகட்டிடு திருநாள்!-அது
சுந்தரமண் கேரளத்து
திருவோண திருநாள்!! 11

  • கவிஞர்… கண்ணன் திருமலை அய்யங்கார்.

அஜினி. நாக்பூர், மஹாராஷ்டிரம்

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version