Home இலக்கியம் கவிதைகள் ஞானத்தின் சிறப்பில்நாம் நன்று செய்வோம்!

ஞானத்தின் சிறப்பில்நாம் நன்று செய்வோம்!

kavithai
kavithai

கவிஞர் சுவாதி

சினத்தைத்தான் ஆற்றச் சொல்லி ஒளவை சொன்னாள்
சிந்தையையும் ஆற்றி நின்றார் என்ன சொல்ல
மனத்தைத்தான் கல்லாக ஆக்கிக் கொண்டார்
மாண்புகளை கருக்கித்தான் வாழ்ந்து சென்றார்
இனத்தைத்தான் இழந்துநின்றான் அன்றும் கூட
இன்னும் ஏன் இறையாண்மை இழிவு தானே
வனத்தைத்தான் அழித்து நீங்கள் தோட்டம் செய்வீர்
வாட்டமுறும் சொந்தம் தான் வளமை எங்கே

படை கொண்டு வந்தனரே பழையகாலம்
பகைகொண்டா பதுங்குதற்கா ஒன்றும் இல்லை
தடையெல்லாம் ஏதுமில்லை கோயில் தன்னில்
தாழ்பாளும் ஒன்றுமில்லை அங்கே அன்றோ
விடையெல்லாம் தெரிந்தேதான் படையெடுப்பும்
வீணேதான் செய்வாரோ வஞ்சின நட்பு
குடைபிடித்து தாங்கியிங்ஜே செல்வம் கவர்ந்து
கோணலாக்கி சென்றாரே நமது வாழ்வை

சூழ்ந்துள்ள வெளிநாட்டு கும்பெனிசாக
சூளுரைப்போம் அணிதிரண்டு வாரீர்.வாரீர்
மூழ்குமுன்னே தடுத்திடுவோம் விரைந்தே வருக
முத்தழிழால் களையெடுப்போம் முடியும் நம்மால்
தாழ்வதற்கோ பிறந்தானோ தமிழன் தானும்
தலைமுறையில் இல்லையடா எனக்கு வீழ்ச்சி
பாழ்பட்டு போயிடவும் விட்டிடுவோமோ
பதர்கள்நீர் பாய்சுருட்டி ஓடிப் போங்கள்

கல்லறைக்குள் ஒடுக்கிடுவோம் கவனம் கொள்வீர்
கயமைகளிம் நிறமறிந்து அழிப்போம் நாங்கள்
கொல்லாமல் கொன்றிடுவோம் அமைதியின் மூச்சால்
குற்றமெலாம்.நிறுத்திடுங்கள் இது கோயிலின் சக்தி
நில்லாமல் ஓடிடுங்கள்.தருணம் இதுவே
நெருப்பாக மாறிடுவோம் இனிமேல் நாங்கள் வெல்லாமல்.விடமாட்ட விதியை எதிர்த்தே
வீணான கனவுவேண்டாம் எம்மை மாய்க்க

ஞானத்தின் சிறப்பில்நாம் நன்று செய்வோம்
நம்பிக்கை எம்சொத்து விற்கமாட்டோம்
வானத்தின் ஒளிவந்து எம்மைக் காக்கும்
வன்மத்தின் வாலைக்கூட வெட்டி வீழ்த்தும்
சீனத்தின் வம்பெல்லாம்.செல்லாக்காசு
சிறுபிள்ளைத் தனமன்றோ அவரின் போக்கு
கூனத்தின் மனம் கொண்ட குற்றம் அவரே
குவலயத்தின் பிச்சைதான் அவரின் வாழ்வு-

  • எஸ்.சுவாதி M.Com. M.A. M.Phil., புதுக்கோட்டை

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version