Home இலக்கியம் கவிதைகள் இன்ப மாம்தீ பாவளி..!

இன்ப மாம்தீ பாவளி..!

deepavali-murugan
deepavali murugan

“இன்ப மாம்தீ பாவளி”
– மீ.விசுவநாதன் –

அன்புக் குழந்தை பாரதி – பொது
அறிவில் சிறந்த மாணவி
இன்ப மாம்தீ பாவளி – அவள்
தினமும் கொஞ்சும் வான்மதி

சின்னச் சின்ன பூவெடி – நம்
சிரிப்பு தானே சரவெடி
என்று சொல்லி ஆடுவாள் – அவள்
இதயம் நட்புக் காவடி

ஊரைச் சூழும் புகையென – வெடி
ஒன்றும் போட விரும்பிடாள்
நாரை கொக்கு குருவியும் – அதில்
நடுங்கும் என்று பதறுவாள்

என்னைப் போலச் சிறுமியர் – தான்
இந்த வெடிகள் செய்கிறார்
என்று வருத்தங் கொள்ளுவாள் – அதை
விட்டு வாங்கா தோடுவாள்

வீடு முழுதும் விளக்கினால் – ஒளி
வீசச் செய்து மகிழுவாள்
நாடு முழுதும் நம்முயிர் – எனும்
நல்ல இனிப்பு மனத்தினாள்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version