spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇலக்கியம்கட்டுரைகள்பாரதியைப் புரிந்து கொள்ளுங்கள்!

பாரதியைப் புரிந்து கொள்ளுங்கள்!

- Advertisement -
bharathiar
bharathiar

கெட்டிருந்த நாடுதன்னை ஒட்டவைக்க ஒருகுழந்தை
எட்டயத்து புரமதனிற் பூத்து வந்தது – அதன்
கட்டளைக்கு எட்டுதிக்கும் காத்தி ருந்தது.

பாரதத்து மீதுதோன்றிப் பாரனைத்தும் ஆள்வதற்கு
வீரமோடு நல்லறிவும் தாங்கி வந்தது – அது
பாரதியின் கருணைபெற்று ஓங்கி வந்தது.

சுப்பையா என்னுமவன் செப்புமொழி கேட்டுவிட்டு
மெய்ப்புலவர் பாரதியாம் பட்ட மளித்தார் – அவன்
துப்பியசொற் கேட்டுபிறர் தொப்பை இளைத்தார்.

பிறப்புமுதல் துலங்கிநின்ற அறிவுகண்டு அனைவருமே
சிறப்புடனே வாழ்கவென்று ஆசிபுகன்றார் – அவன்
இறவாப்புகழ் அடைவனென்று பேசி மகிழ்ந்தார்.

கம்பனுக்குப் பின்னாலே அம்புவியை ஆளவந்த
உம்பர்குலக் கவிவேந்தன் பாரதி தானே? – அவன்
வெம்பிநின்ற தமிழ்க்கொடியைத் தழைக்கவைத் தானே.

உலகத்தில் மிளிர்கின்ற பலமொழியும், இலக்கியமும்,
பலகலையும் ஆய்ந்தறிந்த அறிஞன் தானே – அவன்
தலையெனவே கொண்டதுநம் தமிழினைத் தானே.

சொந்தமொழித் திருநிலமாம் செந்தமிழை வாழவைக்க
முந்திவந்த சிந்துபொழிக் கவிதை மேகம் – அவன்
சந்ததமும் போதையூட்டும் காதல் ராகம்.

பூச்சிதறும் வண்ணமொழிப் பேச்சொன்றே இனிதென்று
மூச்செல்லாம் தமிழாகும் மேன்மை கண்டான் – உயிர்க்
கூச்செறியக் கவிபாடும் பான்மை கொண்டான்.

தொட்டணைத்த வறுமையிலும் திட்டமுடன் கவிபாடிக்
கிட்டவந்த காலனையே எட்டி உதைத்தான் – அவன்
கட்டறுந்த கயமைகளைச் சுட்டு வதைத்தான்.

நீதியினை நெஞ்சிலேற்றி நாதவழும் கவிதையினால்
சாதியினைச் சாக்கடையில் சரிய வைத்தவன் – விழிச்
சோதியிலே தீமைகளை எரிய வைத்தவன்.

பூமியெங்கும் சூழ்ந்துநின்ற தோமிருளை நீக்குதற்குத்
தீமுகத்துச் சூரியனாய் ஒளியை வீசினான் – அவன்
பாமரரும் வீறுகொள்ளக் கவிதை பேசினான்.

படுதளைகள் அறுந்துகெட விடுதலையைக் காணுதற்குச்
சுடுங்கனலாற் சொற்கருவி தீட்டி வைத்தவன் – அவன்
விடுங்கணையாற் பகையுயிரை வாட்டி நைத்தவன்.

பாடுகின்ற திறங்கேட்டு ஆடிநின்ற வெள்ளையரை
ஓடுஎன்று விரட்டிவந்த ஒற்றை வேங்கை – அவன்
பாடமதன் வெறியேறிப் பேசும் மூங்கை.

எங்கெங்கும் சக்திகண்டு அங்கவளின் பக்திகொண்டு
மங்காத மணிக்கவிதை நூறு படைத்தான் – அவன்
பொங்கிவரும் கங்கையெனச் சாறு வடித்தான்.

உண்மையான கடவுளென்று கண்ணனையே எண்ணிநின்று
பண்பலவும் பாடிவைத்து ஏற்றிய பித்தன் – அவன்
பெண்மையதன் பெருமையினைப் போற்றிய வித்தன்.

நிலமெங்கும் மனிதனவன் குலமொன்றே என்றறைந்து
நலம்வாழும் நெறிகாட்டி நடந்த தலைவன் – வாழ்வின்
இலக்கணத்தை நிலைநாட்டப் பிறந்த புலவன்.

பாப்பாவை அருகழைத்துப் பாப்புனைந்து நீதிசொன்ன
தூப்புமிகு தெய்வீகக் கவிதை அரசன் – அவன்
மூப்பின்றி முழங்குகின்ற புதுமை முரசம்.

தீஞ்சுவைசேர் காப்பியமாம் பாஞ்சாலி சபதமதில்
வான்சிவக்கும் தேசபக்திக் கனலும் வைத்தான் – குளிர்
பூஞ்சுனைபோல் வேதாந்தப் புனலும் வைத்தான்.

குயிற்பாட்டில் உடல்வாட்டும் உயிரோட்டக் காதலினை
உயர்வாக்கி உள்ளார்ந்த தத்துவம் செய்தான் – தமிழ்ப்
பெயரோங்கத் தரணியெலாம் சொற்றவம் செய்தான்.

பார்வணங்கும் மாகவியின் கீர்த்தியினை இன்றுஇங்கு
யார்யாரோ மேடையேறிப் பாடு கிறாரே? – அவர்
பேர்பேராய்ப் பதிப்புரைகள் போடு கிறாரே?

நேற்றுவரை பாரதியைத் தூற்றியவர் ஒன்றுகூடிப்
போற்றவந்த காரணந்தான் என்ன, என்ன? – அவர்
மாற்றுமனம் கொண்டது’தான்’ மின்ன, மின்ன.

தீச்சுடர்போல் துலங்குமொழி வீச்சுதரும் பாரதிதான்
பேச்சுடனே போவதற்கா கவிதை இசைத்தான்? – மேற்
பூச்சுக்கா தமிழ்த்தாயின் உயர்வை நசைத்தான்?

காசுக்காய்ப் பாரதியைப் பேசிவிட்டுப் பறந்துவிடும்
வேஷதாரிப் பறவைகளே, கொஞ்சம் நிற்பீர்! – நன்கு
யோசித்து அவன்வழியில் நடக்கக் கற்பீர்!

இலங்கை வானொலியில் ஒலிபரப்பான நாள்: 11-10-1982.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe