முந்தைய தேவர்க்கு மூத்தவனே
தொந்திக் கணபதி தூயவனே
சந்தித் தெருவில் அமர்பவனே
சங்கடம் நீக்கிச் சிரிப்பவனே
சித்தி புத்தி சேர்த்தவனே
சிந்திப் பவரைக் காப்பவனே
சக்தி உமையின் பாலகனே
பக்திக்கு உருகும் பாமரனே
சங்கர சிவனின் புத்திரனே
ஐங்கரம் கொண்ட வித்தகனே
வேலன் முருகன் சோதரனே
வேணும் வரந்தரும் சோபனனே
மாலன் நாரணன் மருமகனே
மாறா விதியும் அறுப்பவனே
உனதிரு சரணம் பிடித்தோமே
மனதிரு மங்கள மறையவனே.
~ பத்மன்
கண பதி யானை முகத் தானை
குண நிதி யானை கரத் தானை
தும்பிக் கை யானை அங்குசத் தானை
நம்பித் தொழு வானை நலஞ்செய் வானை…
துயர் அறுப் பானை வயிற் றானை
உயர் வரத் தானை உயிர்த் தானை
அழகிற் பெரி யானை அருள் வானை
தொழுது நிற்கின் றோம் தொண்டர் நாமே!
உமை யுதித் தானை உயர்ந் தானை
நமைக் காப் பானை நல் லானை
செய்தமிழ் வல் லானை செய் வானை
முத்தமிழ் தரு வானை போற்று கின்றோம்…
~ செந்தமிழன் சீராமன்