- Ads -
Home இலக்கியம் கவிதைகள் தோளில் கை போட்டபடி…

தோளில் கை போட்டபடி…

தோள்மீது கை போடவில்லை - கடை வெறுப்புக்கும் இழப்பிற்க்கும் தெளிவற்ற கொள்கைக்கும்

#image_title
#image_title

தோள்மீது கை போடவில்லை.- யுத்த
துயர்தீர உயிர்வாழ
மீள்பாதை உருவாக
மவுனத்தில் தைரியம் சொன்னாய்- நீ
தோள்மீது கை போடவில்லை. 01

தோள்மீது கை போடவில்லை- பேர்
அமைதியும் சாந்தமும்
வாள்முனையில். வாராது
உடன்பேசி தீர்த்திடச் சொன்னாய்- நீ
தோள்மீது கை போடவில்லை. 02

தோள்மீது கை போடவில்லை – ரஷ்ய
“புடினு”க்கும் “ஜெலன்ஸ்கி”க்கும்
ஆள் முகம் பார்க்காமல்
உயர்தீர்வை உன்தீர்வு என்றாய்- நீ
தோள்மீது கை போடவில்லை. 03

தோள்மீது கை போடவில்லை – என்றும்
மாறாத வெளிநாட்டு
கொள்கையை பறைசாற்றி
பாரத முகங்காட்டி. வந்தாய் – நீ
தோள்மீது கை போடவில்லை 04

தோள்மீது கை போடவில்லை – ஜெய
ராமனின்நல் வழிநின்று
தாளிலா உறவுக்கு
தூய்மையின் மனிதத்தை சொன்னாய் – நீ
தோள்மீது கை போடவில்லை. 05

தோள்மீது கை போடவில்லை – கடை
வெறுப்புக்கும் இழப்பிற்க்கும்
தெளிவற்ற கொள்கைக்கும்
மாமருந்து சனாதனம் என்றாய் -,நீ
தோள்மீது கை
போட்டு நின்றாய் 06.வ

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version